மத்திய பிரதேசத்தில் அமைய உள்ள இந்தூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இன் தகவல் மென்பொருள் நிறுவனத்தை அமைக்க அரசு அனுமதி அளித்தது. மேலும் மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி மாநிலத்தில் உள்ள SEZ இல் இருந்து வீடியோகான் குழுவை வெளியேற்றவும் அரசு அனுமதி தந்தது என்று அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சார்ந்த பிரபல நிறுவனமான டிஜிட்டல் வேவுஸ் அதன் புதிய தயாரிப்பான "டேப்லஸ் ரியோ" டேபுலேட்டை இந்திய சந்தையில் வெளியிடுகின்றது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 11,990 ஆகா இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடி நிறுவனமான மைக்ரோ டெக்னாலஜிஸ் பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு "பிராட்பேண்ட் மீது வீடியோ" ( VOB) என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட தொடர்பு அமைப்பு உருவாக்க சுமார் ரூ 160 கோடி மதிப்புள்ள ஒரு திட்டத்தை தொடங்குகின்றது.
அனில் அம்பானி குரூப் நிறுவனத்தின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) இன்று தெரிவிக்கையில், சரியாக சேவைக்கு பணம் செலுத்தாததால் எடிசலாட் டி.பி. நெட்வொர்கை அதன் நெட்வொர்குகளிருந்து விடுவிக்கின்றது என்று அறிவித்தது.
பெரும்பாலும் நாடு முழுவதும் ரயில்வே விசாரணை மையங்களில் தரப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருப்பதில்லை. இதற்கு காரணம் தகவல் தரும் கருவிகள் துல்லியமானதாக இல்லை. இதற்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் ரயில்வே பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.