Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வணிகச் செய்திகள்

கோடீஸ்வரர்களுக்கென்றே பிரத்யேக வங்கி

இந்தியாவின் முன்னணி மற்றும் பெரிய அளவிலான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ), ஐதராபாத்தில், கோடீஸ்வரர்களுக்கென்றே என பிரத்யேக வங்கி கிளை ஒன்றினை துவக்கி உள்ளது. இந்த கிளை குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உயர் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த வங்கி கிளையில், கணக்கு துவங்குவதற்கு குறைந்தது ரூ. 1 கோடி கட்ட வேண்டும் என்றும், முறறிலும் கோடீஸ்வரர்களுக்கென்றே இந்த கிளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் வைத்துள்ள அதிபதிகள், இதனையே அழைப்பாக ஏற்று, வந்து பலனை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இந்த கிளை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 4 ஆயிரம் சதுர அடி பரப்பரவில் அமைக்கப்பட்டுள்ள வங்கியின் இந்த கிளை, கோடீஸ்வரர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாகவும், மற்ற வங்கி கிளைகளைப் போல் அல்லாமல், இந்த வங்கி கிளையில் வாடிக்கையாளர்களுக்கென்றே பிரத்யேக ரிலேசன்ஷிப் மேனேஜர்கள், 24/7 லாக்கர் வசதி, நீட்டிக்கப்பட்ட வங்கிப் பணி நேரம், வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் மற்றும் பணத்தை வாங்கிக் கொள்ளும் வசதி, 5 நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிறப்பம்சங்கள் இந்த வங்கி கிளையில் உள்ளது என்றும், வை பை தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட பிசினஸ் கான்பரென்ஸ் ஹால், ஷபையர் கான்பரென்ஸ் ரூம், தங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள 'பேர்ல்' காபி பாரும், 'டோபாஜ்' என்ற பெயரில் நவீன வகையில் வடிவமைக்கப்பட்ட லாக்கர் ரூம், உடைகளை மாற்றிக்கொள்ள வசதியாக 'ஓபல்' என்ற பெயரிலான டிரஸ்சிங் அறையும், ஓனிக்ஸ் மற்றும் கார்னெட் என்ற பெயரிலான வாஷ்ரூம்களும் இந்த கிளையில் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப‌ர‌ண‌த்த‌ங்க‌த்தின் விலை விர்ர்

 பண்டிகை காலம் நெருங்குவதால் தங்கம் விலை, மேலும் எகிறும் என, தங்கச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 10 கிராம் தங்கத்தின் விலை, 20 ஆயிரம் ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த ஜூன் மாதத்தில், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியபோதும், இந்தியாவில் தங்கத்தின் தேவை, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. ஏராளமானோர் தங்கம் வாங்குவர் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இதனால், தங்கத்தின் தேவை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்கா டாலரின் மதிப்பு பலவீனமாக உள்ளது. இதன் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. பலவீனமான நிதி நிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால், பங்குச் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதலீடு செய்பவர்கள், தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என, அவர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக, தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு காரணங்களாலும், அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை எகிறும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

க‌டும் ம‌ழையால் செங்கல் விலை உய‌ர்வு

பனமரத்துப்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், கடந்த மாதம் 2.70 ரூபாய்க்கு விற்கப்பட்ட செங்கல், 50 பைசா அதிகரித்து 3.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, மல்லூர் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளையில் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

 

ஆகஸ்ட் மாதத்தில் தொடர் மழை துவங்கியதால், செங்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர். உற்பத்தி தடைபட்டதால் கடந்த மாதத்தில் 2.70 ரூபாய்க்கு விற்கப்பட்ட செங்கல், மழையால்  உற்பத்தி குறைந்ததால் 50 பைசா வரையில் விலை அதிகரித்து 3.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை அதிகரித்தும் செங்கலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:முன் கூட்டியே துவங்கிய தொடர் மழையால் செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. மேலும் அச்சில் செங்கல் வார்த்து, அதை உலர தேவையான வெயில் இல்லை. செங்கல் சுட  தேவைப்படும் விறகு  கூடுதல் விலை கொடுத்து வாங்கி வேண்டி உள்ளது.
மழைக்கு முன் தயார் செய்யப்பட்ட  செங்கலை சூளையில் அடுக்கி சுட, மழையில் நனையாதபடி பெரிய கொட்டாய் அமைக்க கூடுதல் செலவு ஆகிறது. அதனால் செங்கல் விலை உயர்த்தி விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு செங்கல் 30 பைசா முதல் 50 பைசா வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் விலை சரிவு

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1765 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.18975 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.32.75 க்கும், பார் வெள்ளி ரூ.30600 க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1749 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.18805 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.32.05 க்கும், பார் வெள்ளி ரூ.29970 க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு கிலோ மல்லிகை 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஸ்ரீவில்லிப்புத்தூர், ரெட்டியப்பட்டி, மல்லி, வலையப்பட்டி, பாறைப்பட்டி உட்பட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை மல்லிகை கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. திருவோணம் பண்டிகையொட்டி நேற்று கிலோ மல்லிகைப்பூ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயி நாகராஜன் கூறியதாவது: கடந்த மாதத்தை விட மல்லிகை பூவிற்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. திருவோணம், திருமணம் நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த விலையேற்றம் இந்த மாதம் முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது என்றார். 

ஏ.டி.எம் சேவையில் மக்கள் அதிருப்தி

நாட்டில் உள்ள ஏ.டி.எம்.,களில் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) 41 சதவீதம் பழுதடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து 'செபி'யின் முன்னாள் தலைவர் தாமோதரன் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வரும் நுõற்றுக்கணக்கான புகார்களில் 41 சதவீதம் ஏ.டி.எம்., மையங்களைப் பற்றியதாக உள்ளது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கணக்கு காட்டும் ஏ.டி.எம்., பணப்பரிவர்த்தனை, பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் தெரிவிக்கும் அவலமும் உண்டு; இது குறித்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுவதில்லை என பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசுடமையாக்கப்பட்ட 26 வங்கிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை; ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். சிறிய அளவிலான வங்கிகள் பெரிய அளவிலான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்ட நிறுவனம் உள்நாட்டு வங்கிகளில் அதற்கான பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. அதற்கு வசதியாக வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றார். 

சென்னையில் தமிழ்க்கணினி நூல்கள், சிடிக்களுக்கு பிரத்யேக ஷோரூம்

சென்னையில் தமிழ்க்கணினி நூல்கள், சிடிக்களுக்கு பிரத்யேக ஷோரூம்
தமிழில் வெளியாகும் தமிழ்க்கணினி நூல்கள் மற்றும் மல்டிமீடியா சிடிக்களை உள்ளடக்கிய விற்பனையகம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள (118) சாஃப்ட்வியூ நிறுவனம், தமிழ்க்கணினி நூல்கள், தமிழ் மென்பொருள் தயாரிப்பு, சிடி, டிவிடிக்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் தமிழ்க்கணினி நூல்கள் மற்றும் தமிழ் சிடிக்கள் உள்ளடக்கிய பிரத்யேக ஷோரூமை துவங்கி, பிற பதிப்பக தமிழ்க்கணினி நூல்களையும் விற்பனை செய்கிறது.
Read more...

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவு

நடப்பு ஆண்டு ஜுலை மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, முந்தைய ஜுன் மாதத்தைக் காட்டிலும் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக இது சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூ3ஜி' செல்போன் அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலத்தைப் பெற நிறுவனங்கள் சென்ற ஜுன் மாதத்தில் வங்கிகளிடமிருந்து அதிக அளவில் கடன்களை பெற்றன. மேலும், முன்கூட்டிய வரியைச் செலுத்துவதற்கு வங்கிகளுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், வங்கிகள் அம்மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து அதிக தொகையை விலக்கி கொண்டன. இதனையடுத்து, சென்ற ஜுன் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 16 சதவீதம் (ரூ.1.27 லட்சம் கோடி) சரிவடைந்து ரூ.6,75,858 கோடியாக குறைந்தது. இது, ஜுலை மாதத்தில் ரூ.10,291 கோடி குறைந்து ரூ.6,65,567 கோடியாக சரிவடைந்துள்ளது. பல பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ள நிலையில், அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் மிஹீச்சுவல் ஃபண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 0.85 சதவீதம் அல்லது ரூ.859 கோடி அதிகரித்து ரூ.1,02,179 கோடியாக உயர்ந்துள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அடிப் படையில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. முன்னணி நிறுவனங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள எச்.டீ.எஃப்.சி. எம்.எஃப்., ஐ.சி.ஐ.சி.ஐ. எம்.எஃப். ஆகியவற்றின் சொத்து மதிப்பு முறையே 2.33 சதவீதம் 6.88 சதவீதம் சரிவடைந்து ரூ.84,628.20 கோடி மற்றும் ரூ.68,715.11 கோடி யாக சரிவடைந்துள்ளது. ஹீ.டி.ஐ. பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,238 கோடி குறைந்து ரூ.62,207.57 கோடியாக சரிவடைந்துள்ளது. பிர்லா சன்லைஃப் பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பில் 2.50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டக் மகிந்திரா எம்.எஃப். மற்றும் எல்-டி எம்.எஃப். ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் முறையே ரூ.1,051 கோடி மற்றும் ரூ.307 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஆக, சென்ற ஜுலை மாதத்தில் 39 பரஸ்பர நிதி நிறுவனங்களில் 19 நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

நடப்பு நிதி ஆண்டில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,000 கோடி டாலர் (சுமார் ரூ.1.80 லட்சம் கோடி) மதிப்பிற்கு உயரும் என பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டில் 3,270 கோடி டாலராக இருந்தது. ஆக, நடப்பாண்டில் இச்சாதனங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,050 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஜுன் மாதத்தில் நம் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் ஜுன் மாதத்தை விட, 90 சதவீதம் உயர்ந்து 510 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 30.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

 

அர‌சு மானிய‌ம் கிடைக்காத‌தால் கதர் விற்பனை மந்தம்

சுதந்திர தின விழாவையொட்டி காதி பொருட்களுக்கு அரசின் தள்ளுபடி சலுகை வழங்காததால் கதர் விற்பன...

புதிய ரூபாய் குறியீடுடன் கூடிய கீபோர்ட் அறிமுக‌ம்

புதிய ரூபாய் குறியீடுடன் கூடிய கீபோர்ட் அறிமுக‌ம்

புரோக்கர்களுக்கு 'செபி' எச்சரிக்கை

முதலீட்டாளர்களின் வர்த்தக் கணக்குளில் இருந்து பணத்தை புரோக்கர்கள் தவறுதலாக பயன்படுத்துவத...

வட்டி உயர்வு குறித்து ஸ்டேட் பாங்க் விரைவில் அறிவிப்பு

"முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி இன்னும் ஓரி...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 22
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED