இந்திய உச்சநிதிமன்றம் வியாழக்கிழமை அன்று 2008 இல் வெளியிடப்பட்ட அனைத்து 122 தொலை தொடர்பு உரிமங்களையும் ரத்து செய்வதாக ஒரு தீர்ப்பை வழங்கியது.
இதைப்பற்றி இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவிக்கையில், தொலை தொடர்பு துறையில் ஏற்ப்பட்ட ஊழல்களை அடுத்து அதனை சீராக்க இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் இதைப்பற்றி விவாதித்து அடுத்த புதிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தை விரைவில் எப்போது நடத்துவது என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் டிராய் அமைப்பு கூறியுள்ளது. மேலும் இந்த தாமதத்தால் நுகர்வோர்கள் எவ்வித கவலையும் மற்றும் கலக்கத்தையும் கொள்ள தேவையில்லை என்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அவரவர் சேவையை பெறலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





