அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அதன் 1.58 கோடி பங்குகளை அரசு பொது துறை காப்பு நிறுவனமான எல்.ஐ.சிக்கு விற்று அதன் மூலம் ரூ 1.590 கோடியை திரட்ட முடிவு செய்துள்ளது என்றும் அதற்காக ஒப்புதல் அளித்துள்ளது என்றும் பிஎன்பி தெரிவித்துள்ளது.
மேலும் இதைப்பற்றி தெரிவிக்கையில், பிஎன்பி வங்கி விருப்பப்பட்டு அதன் பங்குகளை அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலமும் ரூ 1.285 கோடி நிதியை அதிகமாக பெரும் என்றும் தெரிவித்துள்ளது.
இறுதியாக எல்.ஐ. சிக்கு வழங்க இருக்கும் பங்குகளை பற்றி கூறும் பொது, 1.58 கோடி பங்குகளுக்கு முகப்பு கட்டணமாக ரூபாய் 10 - ஐ பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்ணயத்துள்ளது என்று வங்கியின் சார்பாக தெரிவிக்கப்படுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





