நாட்டில் பருவமழை போதிய அளவில் பெய்யாதது, மற்றும் பெருகிவரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றை கருத்தில் கொண்டு,செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என நிதி அமைச்சம் கேட்டுக்கொண்டுள்ளது. விளம்பரங்கள் வெளியிடுவது, அலுவலக செலவுகள், இதர நிர்வாக செலவுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றில் அதிகப்படியான சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்
இந்த வகை செலவுகளை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.அதேபோல், வட்டி செலுத்துவது, கடன்களை திரும்பச் செலுத்துவது, சம்பளங்கள், ஓய்வூதியம், மாநிலங்களுக்கான நிதி கமிஷனின் மானியங்கள் போன்றவற்றிலும் 5 சதவீத அளவுக்கு செலவை குறைக்க வேண்டும்.இவ்வாறு நிதி அமைச்சக கேட்டுக்கொண்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





