மரபணு மாற்றுக் கத்தரிக்காய் குறித்து அரசு முடிவெடுக்கும் வரை, அதை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கப்படாது என, முதல்வர் கருணாநிதி அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்
முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில், பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, பெண்கள் இணைப்புக் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து, மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி அவர்களும் அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றுதெரிவித்தார்.மேலும், எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரை, இதை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this