Saturday
Jul 31st
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2010 - 11 மத்திய பட்ஜெட் - ஒரு பார்வை

E-mail Print PDF

2010-11 ஆம் ஆண்டிற்க்கான மத்திய பட்ஜெட்டை இன்று திரு.பிரணாப் முகர்ஜி சமர்பித்தார். இப்பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி, சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை உயர்கிறது. தங்கம், வெள்ளி, சிகரட், கார்கள், டிவி, ஏ.சி. விலை உயர்கிறது. செட் டாப் பாக்ஸ், சி.டி., எலக்ட்ரிக் கார், பொம்மை, வேளாண்  உபகரணங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.


2010-11
ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில்  தாக்கல் செய்தார். அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவித்தார்.

அதன்படி, ரூ.5 லட்சம் வருமானம் வரை 10 சதவீதம் வரி செலுத்தினால் போதும். ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதமும் 8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வரி கட்டினால் போதும். இதனால் வரி செலுத்துவோரில் 60 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் ரூ.20 ஆயிரமும் ரூ.8 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.50,000ம் சேமிக்க முடியும்.
விவசாயிகளுக்கு 5 சதவீதத்தில் பயிர்க் கடன் கிடைக்கும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக கிராம வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மேம்படுத்துவது, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்.
  • பட்ஜெட்டில் ரூ.11,08,749 கோடி செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.6 சதவீதம் கூடுதல்.
  • திட்டச் செலவுகளுக்கு ரூ.3,73,092 கோடியும் திட்டமில்லாச் செலவுகளுக்கு ரூ.7,35,657 கோடியும் ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது. திட்டச் செலவுக்கு 15 சதவீதமும் திட்டமில்லாச் செலவுக்கு 6 சதவீதமும் ஒதுக்கீடு அதிகரிப்பு.
  • நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதம். இது ரூபாய் மதிப்பில் ரூ.3,81,408 கோடியாக இருக்கும்.
  • 2011-12ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாகவும் 2012-13&ல் 4.1 சதவீதமாகவும் இருக்க இலக்கு நிர்ணயம்.
  • நிகர சந்தைக் கடன் ரூ.3,45,010 கோடி.
  • நிகர வரி வருவாய் ரூ.7,46,651 கோடி. வரியில்லா வருவாய் ரூ.1,48,118 கோடியாக இருக்கும்.
  • பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.25,000 கோடி திரட்டப்படும்.
  • பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.16,500 கோடி வழங்கப்படும்.
  • டிசம்பர் 2009 வரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 127 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நான்கு அம்ச உத்தி கையாளப்படும். வேளாண் விளைச்சலை அதிகரிப்பது, சேதத்தை குறைப்பது, கடன் ஆதரவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கும் முக்கியத்துவம் ஆகியவை இதில் அடங்கும்.
  • வேளாண் கடனுக்கான இலக்கு ரூ.3,25,000 கோடியிலிருந்து ரூ.3,75,000 கோடியாக அதிகரிப்பு.
  • குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ஒரு சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
  • அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1,73,552 கோடி ஒதுக்கீடு. இது திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 46 சதவீதமாகும். சாலை கட்டமைப்புக்கான ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
  • இந்திய அடிப்படை கட்டுமான நிதி நிறுவனம் மார்ச் 2011&ல் ரூ.20,000 கோடியை எட்டும்.
  • மின் துறைக்கான ஒதுக்கீடு 2 மடங்கிற்கு அதிகமாக உயர்த்தப்பட்டு ரூ.5,130 கோடியாக உள்ளது.
  • அடிப்படை கட்டுமானத் துறைக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை கண்டறியும் ஆய்வுக்கு உதவ தேசிய தூய்மை எரிசக்தி நிதியம் அமைக்கப்படும்.
  • சமூக மேம்பாட்டிற்கான செலவினம் ரூ.1,37,674 கோடி. இது திட்டச் செலவில் 37 சதவீதம்.
  • கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.66,100 கோடியாக அதகரிப்பு.
  • தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்ட ஒதுக்கீடு ரூ.40,100 கோடியாக அதிகரிப்பு.
  • பாரத் நிர்மாண் திட்ட ஒதுக்கீடு ரூ.48,000 கோடி.
  • பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய நிதி ரூ.7,300 கோடியாக அதிகரிப்பு.
  • குடிசைகளில் வாழ்வோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான ராஜீவ் வீட்டு வசதி திட்டத்திற்கான ஒதுக்கீடு 700 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1,270 கோடியாக உள்ளது.
  • அமைப்புசாரா தொழிலாளர் தேசிய சமூக பாதுகாப்பு நிதி ரூ.1,000 கோடி முதலீட்டில் அமையும்.
  • ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்.
  • சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு 80 சதவீதம் அதிகரிப்பு. ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.
  • சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிப்பு. ரூ.2,600 கோடி ஒதுக்கீடு.
  • ஒட்டுமொத்த பொது கடன் நிலை மற்றும் அதை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய அறிக்கை 6 மாதத்தில் வெளியிடப்படும்.
  • அன்னிய நேரடி முதலீடுகளை எளிமைப்படுத்தும் வகையில் முதல் முறையாக உரிமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மையப்படுத்தப்படும்.
  • 2008-09&ல் எண்ணெய் மற்றும் உர பத்திரங்களுடன் 7.8 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2009-10&ம் ஆண்டில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது.
  • நிதி சட்டங்கள் மாற்றியமைக்கப்படும். நிதித் துறை சட்டத் திருத்த ஆணையம் அமைக்கப்படும்.
  • பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையத்துக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.
  • ராணுவத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,47,344 கோடியாக அதிகரிப்பு.
  • உரிய காலத்துக்குள் நீதி வழங்குவதற்காக தேசிய நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இயக்கம் அமைப்பு.
  • வருமான வரி வரையறை: ரூ.1.6 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம். ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 20 சதவீதம். ரூ.8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம்.
  • உள் கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ.20,000 கூடுதலாகக் குறைப்பு.
  • உள்நாட்டு நிறுவனங்களுக்கு உபரி வரி 10 சதத்திலிருந்து 7.5 சதமாகக் குறைப்பு.
  • குறைந்தபட்ச மாற்று வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு.
  • சிறிய தொழில்களுக்கு உத்தேச வரிக்கான டர்ன்ஓவர் வரையறை ரூ.60 லட்சமாக அதிகரிப்பு.
  • தொழில்களுக்கு ரூ.60 லட்சம், பிரோஃபஷன் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமாக தணிக்கைக்கான டர்ன்ஓவர் வரையறை நிர்ணயிப்பு.
  • நேரடி வரி விதிப்பு திட்ட வருவாயில் ரூ.26,000 கோடி இழப்பு ஏற்படும். ஆனால், மறைமுக வரி மூலம் ரூ.46,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
  • சேவை வரி விதிப்பு திட்டம் மூலம் நிகர வருவாயில் ரூ.3,000 கோடி லாபம்.
  • செய்திகளை ஆன்லைனில் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.
  • தனி நபர் வரி செலுத்துவோருக்கு சரல் 2 தயார்.
  • சேவை வரி 10 சதவீதமாகத் தொடரும்.
  • சில குறிப்பிட்ட புதிய சேவைகளுக்கு சேவை வரி விதிப்பு.
  • மைக்ரோ வேவ்அவன், இறக்குமதி சரக்குகள், மொபைல் தொலைபேசிகள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், விளையாட்டு பலூன்கள், மிளகு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் வடிகட்டி ஆகியவற்றின் விலை குறைப்பு.
  • பொழுபோக்கு துறைக்கு சுங்கத் தீர்வையில் சலுகை.
  • அமெரிக்க டாலரைப் போல இந்திய ரூபாய்க்கு பிரத்யேக அடையாள முத்திரை.
  • சுத்தமான சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறப்பு சலுகை தீர்வை. ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.50 என்ற விகிதத்தில் எரிபொருள் தீர்வை.
  • மருத்துவக் கருவிகள் இறக்குமதிக்கு ஒரே மாதிரியான அடிப்படை தீர்வை & 5 சதவீதம்.
  • எலும்பு சிகிச்சையில் பயன்படும் செயற்கை மூட்டு, தட்டுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு.
  • பெட்ரோல், டீசலுக்கான கலால் தீர்வை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிப்பு.
  • வேளாண்மை அது சார்ந்த துறைகளில் பெருமளவு வரிச் சலுகை.
  • குளிர்ப்பதன நிறுவனங்களை அமைக்க இறக்குமதி திட்டங்களுக்கு சலுகை.
  • ட்ரெய்லர்கள், செமி ட்ரெய்லர்களுக்கு கலால் தீர்வையிலிருந்து முழு விலக்கு.
    நன்றி : தினகரன்

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED