நமது நாட்டின் மிகப் பெரிய அரசுத்துறையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மத்தியஅரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தை 59.41% இருந்து 51% குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக பாராளுமன்றத்தில் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கிப் பங்கின் விலை தற்போது சுமார் ரூ.2,100-ஆக உள்ளது. இந்த விலை அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 120 கோடி டாலர் (சுமார் ரூ.5,500 கோடி) திரட்ட முடியும்.
தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் மத்திய அரசு 59.41 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இதனை 55 சதவீதமாக குறைத்துக் கொள்வதற்கு ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. இந்நிலையில் இதனை 51 சதவீதமாக குறைப்பதற்கும் உத்தேசித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பங்கு வெளியீட்டின் வாயிலாகவோ, தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் மூலமாகவோ அல்லது உரிமைப் பங்கு வெளியீட்டின் வாயிலாகவோ பாரத ஸ்டேட் வங்கி நிதி திரட்டுவதற்கு அனுமதி கேட்டு மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





