நாட்டின் முன்னணி SUV உற்பத்தியாளர்களான மஹிந்திரா & மஹிந்திரா,அதன் "XUV 5OO " இன் இரண்டாவது கட்ட விற்பனைக்கு 25,000 க்கும் மேற்பட்ட புக்கிங் விண்ணப்பங்களை பெற்றிருந்தது. அதிலிருந்து 7200 அதிஷ்டசாலிகளை மஹிந்திரா நிறுவனம் தேர்ந்தெடுத்து அவர்களது பெயர்களை அறிவித்துள்ளது.
மேலும் மஹிந்திரா & மஹிந்திராவின் SUV க்கான நிர்வாகி கூறுகையில், தேர்ந்தெடுத்த அதிஷ்டஷாலிகளுக்கு நிறுவனத்தின் விதிகள் மற்றும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு எக்ஸ்.யு.விற்கான புத்தம் புதிய கார் சாவிகளை நிறுவனம் ஒப்படைக்கும் என்றும் இரண்டாவது கட்ட விற்பனைக்காக மும்பை, தில்லி, சென்னை, பெங்களூர், புனே, ஹைதெராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற 19 முக்கிய நகரங்களில் அதன் விற்பனை கிளைகளை மஹிந்திரா நிறுவனம் திறந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





