பிளாக்பெரி நிறுவனம் தமது மொபைல் சேவையை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செய்து கொடுக்காவிட்டால், அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் பிளாக்பெரிக்கு அனுமதி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுத்துள்ளன. இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெரி மொபைலில் இல்லை. இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து, பிளாக்பெரி நிறுவன சேவைகளையும் தனது கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கண்காணிப்பு தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், பிளாக்பெரி மொபைல் சேவைகளை தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



'இந்தியாவில் கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,' என மத்திய மன...
பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், ஐந்து செயற்கைக்கோள்களுடன், திட்டமிட்டபடி நேற்று விண்ணில் வெற்றி...


i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...