Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுச் செய்திகள்

பிளாக்பெரி மொபைல் சேவை தொடருமா

பிளாக்பெரி நிறுவனம் தமது மொபைல் சேவையை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செய்து கொடுக்காவிட்டால், அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் பிளாக்பெரிக்கு அனுமதி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுத்துள்ளன. இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெரி மொபைலில் இல்லை. இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து, பிளாக்பெரி நிறுவன சேவைகளையும் தனது கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கண்காணிப்பு தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், பிளாக்பெரி மொபைல் சேவைகளை தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

சைபர் கிரைம் என்று சொல்லப்படும் கணினி வழி குற்றங்களில் இருந்து பாதுகாக்க பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கே.ஆர்.ஆனந்தா கேட்டுக் கொண்டார். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது : தற்சமயம் மோசடி செய்பவர்களின் செயலாக்கம் விரிவடைந்துள்ள சூழலில் சான்றிதழ்கள், கடிதங்கள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ கடித ஏட்டில் உயர் வங்கி அதிகாரியின் கையப்பம், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அளித்து பொது மக்களை தங்கள் வலையில் எளிதாக சிக்க வைக்கின்றனர். இத்தகைய வலையில் சிக்கயவர்கள் பணத்தை வங்கியில் செலுத்துகின்றனர். பணம் செலுத்தப்பட்டவுடன் மோசடியாளர்கள் அந்த பணத்தை கணக்கில் இருந்து எடுத்துவிடுகின்றனர். மேலும் அதிக தொகைகள் பரிவர்த்தனை வரிகள், பதிவுக் கட்டணம் என்ற பெயரில் கேட்கப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகளிலிருந்து பொது மக்களை காப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மூலமாக தொடர் விளம்பரங்கள் செய்து வருகிறது. ரிசர்வ் வங்கி தனிப்பட்டவர்களுக்காக வைப்பு கணக்குகளை தொடங்குவதில்லை. அதேபோன்று எந்தவொரு தனிப்பட்ட நபரின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரிலோ கணக்குகளை பராமரிப்பதில்லை.
இதுபோன்ற கணக்குகளில் பணம் சேர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி எவ்விதமான சான்றிதழும் அளிப்பதில்லை. பண விநியோகத்திற்கான அதிகாரமும் எந்தவொரு நபருக்கு வழங்குவதில்லை. இத்தகைய மோசடி திட்டங்களில் சிக்கி பொது மக்கள் பலர் பெரும் தொகைகளை இழந்துள்ளனர். இந்தியாவிற்கு வெளியே இத்தகைய நோக்கத்திற்காக பணத்தை அனுப்புவது, அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999-க்கு எதிரானதாகும். மேலும் ரிசர்வ் வங்கியின் இணையதளம் போலவே போலியான இணையதளத்தையும் உருவாக்கி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவற்றில் இருந்து பொது மக்களை எச்சரிக்கும் விதத்தில் பத்திரிகை அறிக்கைகள் மற்றும் செய்திகள் மட்டுமின்றி இந்திய அரசுடன் இணைந்து 'ஜகோ கிராஹக் ஜகோ' என்ற நிகழ்ச்சி மூலம் இந்த தகவல்களை விளம்பரப்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும் அல்லது சைபர் கிரைம் குற்றவியல் பிரிவில் தொடர்பு கொண்டு தங்களது புகாரை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஆனந்தா தெரிவித்தார். 
 

பள்ளி மாணவர்களுக்கு இலவச அகராதி

அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் இலவச அகராதிகள் நாளை வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் படிக்கும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 27ல் வாழ்வியல் திறன் குறித்த ஒரு நாள் பயிற்சி, அனைத்து குறு வள மையங்களில் அளிக்கப்படுகிறது. இதற்காக, படைப்பாற்றல் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளின் மாணவர்களும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவிகள் 1,110 பேரும், எஸ்.சி., எஸ்.டி, பிரிவில் மாணவ, மாணவிகள் தலா 1,111 பேரும், சிறுபான்மை முஸ்லிம் மாணவ, மாணவிகள் தலா 555 பேர்களுமாக 4,444 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 540 பேர் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் தயாரிக்கப்பட்ட அகராதி இலவசமாக வழங்கப்படுகிறது.

குறைந்த வட்டியில் கடன் கொடுக்க‌ வ‌ங்கிக‌ளுக்கு ஆலோச‌னை

கடன் உதவி தரும் தனியார்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்ற  பெயரில் வங்கிகளுடன்  இணைந்து  பணப்பரிவர்த்தனை புரிய  அங்கீகாரம் தரலாம் என்று   முன்னாள், "செபி' தலைவர்  தாமோதரன் கூறினார். வங்கிகள் எல்லாருக்கும் கடன் தர முடியவில்லை. ஆனால், அவ்வப்போது  கேட்டதும் பணம் தரக்கூடிய, "வட்டிக்கு பணம் தருபவர்கள்' அதிக வட்டி வசூலித்தாலும் பணம் தருகின்றனர். கிராமப்புறங்களில் இவர்கள்  முக்கியமாக பணியாற்றுகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்த அளவு அவசரத்திற்கு  கடன் பெறுபவர்கள் இரண்டு வட்டிக்கும் குறையாமல் தந்து பணம் பெறுகின்றனர். இவர்கள் வசதியாக கடன் பெற  லைசென்சுடன், "வட்டிக்கு பணம் தருபவர்கள்' என்று தொழில் நடத்துபவர்களை  வங்கிகளின்  "வர்த்தக தொடர்பாளர்களாக '  ( பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்)  நியமிக்கலாம்  என்று  முன்னாள், "செபி' அமைப்பின்  தலைவர்  தாமோதரன்  யோசனை கூறினார். அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கித் தகவலின் படி நாட்டில் உள்ள மொத்த மக்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே வங்கிக்கணக்கு வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அதிக வங்கிக் கிளைகள் மட்டும் திறப்பதால்  மிகவும் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு கடன்  வசதி கிடைக்க வழியில்லை. அதே சமயம்  கிராமங்களில் சிறு சிறு அமைப்புகளிடம்  வாங்கும் கடன் உதவிக்கு  27  சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.  இப்படி  பணம் தருபவர்களை  மக்கள் நம்பித்தான்  வாழவேண்டும். மாறாக வங்கிகள் சேவை சிறக்கவும்,  இம்மாதிரி  லைசென்சுடன் பணம் தருபவர்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்று  நியமிக்கலாம்.  இவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு டிபாசிட் சேகரிப்பது, பரஸ்பர முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துதல், மற்றும் சிறிய அளவிலான  கடன் தருவது ஆகியவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம்  வட்டி அளவு குறையும். இது வங்கி நடைமுறைகள் கடைசி மட்டத்தில் உள்ள மக்களுக்கு அடையவும் உதவிடும். வங்கி நடைமுறைகள் சிறக்க உதவும். இவ்வாறு  தாமோதரன் கூறினார்.

அமரராஜா குழுமமத்தில் புதிதாக 3 ஆயிரம் பேர் நியமனம்

ஆட்டோமோடிவ் பேட்டரி தயாரிப்பில் தேசிய அளவில் முடிசூடா மன்னனாக விளங்கும் அமரராஜா நிறுவனம், வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்தவும், நிறுவனத்தின் வருவாயை 2 பில்லியன் அமெரி்க்க டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமரராஜா நிறுவன மனி்தவள மேம்பாடு பிரிவின் துணை தலைவர் ஜெய்கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனத்தின் தற்போதைய அளவில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், நிறுவனத்தின வருவாய் ரூ. 2 ஆயிரம் ‌கோடியாக உள்ளதாகவும், தற்போதைய அளவில், தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள தங்கள் நிறுவனம், 2025ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் பார்சூன்500 (அதாவது தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில்) இடம்பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், நிறுவனத்தில் 55 முதல் 60 சதவீதம் வரை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், வளர்ச்சி சாத்தியப்படவேண்டுமென்றால், அதற்கு அதிகப்படியான ஊழியர்கள் தேவை என்றும், அதற்காகவே, வரும் 5 ஆண்டுகளுக்குள், புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும், நிறுவனத்தின் நிகர வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்( இந்திய மதிப்பில் ரூ. 9,300 கோடி) ஈட்ட திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'விஸ்கி' போட்டால் கார் ஓடுமா

இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எடின்பெர்க்கில் உள்ளது நேப்பியர் பல்கலைக்கழகம். தாவர எரிபொருள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞானி மார்ட்டின் டாங்னி தலைமையிலான குழுவினர், விஸ்கியை ஆராய்ந்தனர். அதில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ‘பாட் ஆல்’, தானியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ‘ட்ராப்’ ஆகிய 2 மூலப்பொருட்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு சர்வதேச காப்புரிமையும் பெற்றுள்ளனர். விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதுபற்றி மார்ட்டின் டாங்னி கூறியதாவது: இந்த பயோ-ச்ட்ணீ;ப்யூயலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 5 10 சதவீதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவு மிச்சம் செய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும். விஸ்கி தயாரிப்பில் பயன்படும் 2 மூலப்பொருட்கள் மட்டுமே இவை என்பதால் செலவும் குறைவாகவே இருக்கும் என்றார். 

'தத்கல்' முறையிலும் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம்

ரேஷனில் எந்த பொருளும் தேவைப்படாதவர்கள், இருப்பிட ஆதாரத்திற்காக மட்டும் ரேஷன் கார்டு வேண்டுவோர், 'தத்கல்' முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் போட்டோவுடன் பூர்த்தி செய்து, கருவூல கணக்கில் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இருப்பிட முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்து, ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஏழு நாளில் வெள்ளை நிறத்திலான ரேஷன் கார்டு வழங்கப்படும். இவற்றை பொருட்கள் பெறும் கார்டாக மாற்றம் செய்ய முடியாது என, அரசு தெரிவித்துள்ளது. 

எஸ்டிடி அழைப்பு இனி நிமிடத்திற்கு 30 பைசா ம‌ட்டும்

இந்தியாவின் முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான டாடா டெலிசர்வீஸ் நிறுவனம், எஸ்டிடி அழைப்புகள் நிமிடத்திற்கு 30 ‌பைசாவும், லோக்கல் அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா எனும் புதிய டாரீப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ரா பிளான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தைப் பெற, ப்ரீபெய்டு உபயோகிப்பாளர்கள், ரூ. 58 மற்றும் ரூ. 104 ரீசார்ஜ் செய்வதன் மூலம், 3 மாதத்திற்கு இந்த பயனை அனுபவிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மொபைல்போன் விற்பனை விர்ர்

மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 2010ஆம் ஆண்டில் மட்டும் மொபைல்போன் விற்பனை 18.5 சதவீதம் உயர்ந்து 13.86 கோடியாக உயரும் என்று இது குறித்து ஆய்வு செய்துள்ள கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்ற மொத்த மொபைல்போன்களின் எண்ணிக்கை 11.7 கோடியாகும். இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து 2014ஆம் ஆண்டில் 20.6 கோடியாக மொபைல்போன் விற்பனை அதிகரிக்கும் என்று கார்ட்னர் கூறியுள்ளது. இந்திய சந்தையில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவை நோக்கியா, மோட்டரோலா, ரிலையன்ஸ், வோடபோன் ஆகியன, ஆனால் இப்போது குறைந்த விலை உள்ளுர் தயாரிப்புகளும், சீன தயாரிப்புகளும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகின்றன என்று கார்ட்னர் ஆய்வு நிறுவன உயர் அதிகாரி அன்சுல் குப்தா கூறியுள்ளார். தற்போது இந்திய சந்தையில் 50க்கும் மேற்பட்ட மொபைல்போன் நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனை ஆகி வருவதாக கார்ட்னர் தெரிவித்துள்ளது. 3ஜி என்றழைக்கப்டும் மூன்றாவது தலைமுறை மொபைல்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியிருந்தாலும், அவைகளின் விற்பனைப் பங்கு 2010ஆம் ஆண்டில் 16.7 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் 3ஜி செல்பேசிகளின் விற்பனை மொத்த எண்ணிக்கையில் 69 சதவீத அளவிற்கு உயரும் என்றும் கூறியுள்ள கார்ட்னர், ஸ்மார்ட் போன்களில் விற்பனை தற்போது 5.2 சதவீதமாக உள்ளது, இது 2014இல் 18 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. 

மாற்றுத் திறனாளிகள் திருமண தம்பதியருக்கு 25ஆயிரம் நிதியுத‌வி

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். வருமான உச்ச வரம்பும் நீக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்யும் இயல்பான நிலையில் உள்ளவர்களை ஊக்குவிக்க, திருமண நிதியுதவித் திட்டம் 1986ல் துவக்கப்பட்டது. ஒரு மாற்றுத் திறனாளியை மற்றொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உள்ளதாக, முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வருமான உச்ச வரம்புத் திட்டத்தின் கீழ் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித் தொகை, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமாகவும், மீதத் தொகை தேசிய சான்றிதழ் பத்திரமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ஒரு கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

 

வேலூரில் வரும் ஆக 1ம் லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு

இந்திய சுதந்திரத்திற்கே வித்திட்ட வேலூரில் வரும் ஆக 1ம் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிர...
Read more...

உலகின் முதல் பெராரி தீம் பார்க்

உலகின் முதல் பெராரி தீம் பார்க் உலகின் முதல் பெராரி தீம் பார்க் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு வெளிய...

கல்விக்காக ரூ.2.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

கல்விக்காக ரூ.2.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு 'இந்தியாவில் கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,' என மத்திய மன...

சி-15 ராக்கெட் விண்ணில் செலுத்தி சாதனை

சி-15 ராக்கெட் விண்ணில் செலுத்தி சாதனை பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், ஐந்து செயற்கைக்கோள்களுடன், திட்டமிட்டபடி நேற்று விண்ணில் வெற்றி...

Last Updated ( Tuesday, 13 July 2010 11:26 )

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 7
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED