உலகின் தேடல்பொறி ஜாம்பவானாக விளங்கிவரும் கூகிள் நிறுவனம் இந்தியாவிற்க்கான புதிய தலைமை அதிகாரியாக இராஜன் ஆனந்தனை நியமித்துள்ளது. திரு.இராஜன் ஆனந்தன் ஏற்கனவே மைக்ரோசாப்டின் இந்தியப் பிரிவை நிர்வகித்து வந்தார். கூகுளின் இந்திய பிரிவை நிர்வகித்து வந்த சைலேஷ் ராவிற்குப் பதிலாக இராஜன் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பிரிவு தலைமை அதிகாரி மற்றும் ஜப்பான்,ஆசியா பசிபிக் பகுதிகளுக்கான விளம்பரம் , விற்பனைத் துறைகளுக்கான தலைவராக பொறுப்பு வகித்த சைலேஷ் ராவ் இனி ஜப்பான், ஆசியா பசிபிக் பகுதிகளின் விளம்பரம் மற்றும் விற்பனைத் துறையை மட்டும் கவனித்துக் கொள்வார்.
வருடத்திற்கு 50 % வளர்ந்து வரும் இந்தியாவின் இணையத்தள பயன்பாட்டு விகிதத்தை நிர்வகிக்க திறமை வாய்ந்த தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாய் கூகுளின் ஜப்பான், ஆசியா பசிபிக் பகுதிகளுக்கான பிரசிடெண்ட் டேனியல் அலிகரி தெரிவித்தார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





