இந்தியாவின் ஜந்தாவது பெரிய மொபைல் சேவை நிறுவனமான ஏர்செல் புதிய 3 ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ஏர்செல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குர்தீப் சிங் கூறுகையில்,2010 ஆம் ஆண்டில் எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜந்து கோடியை தாண்டியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை வழங்கும் வகையில் எங்களின் அடுத்த முயற்சியாக 3 ஜி சேவையை வழங்குகிறோம். எர்செல் 3 ஜி பக்கெட் இணையம் வாடிக்கையாளர்களுக்கு பேஷன்,இசை,சினிமா, விளையாட்டு என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் செயல்படும் ஏர்செல் 13 வட்டங்களில் 3 ஜி சேவையை வழங்க உள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





