Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டுரைகள்

வீழ்ச்சியின் பிடியில் வேளாண்மை

"இந்த ஆண்டு சர்க்கரை மற்றும் அரிசி போதுமான விளைச்சல் இல்லை; இதனால் உணவுப் பற்றாக்குறை வரும். பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் காலம் மாறிப் போய் விட்டது' என, விவசாய அமைச்சர் சரத்பவார் கூறுகிறார். இந்நிலைமையை சமாளிக்க, தாய்லாந்து, சீனா மற்றும் பாகிஸ்தானிருந்தும் கூட லட்சக்கணக்கான டன் அரிசி, சர்க்கரை இறக்குமதி செய்யப்படுமென்று, உணவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது; உண்மை நிலை அதுவல்ல.


ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள், விவசாயம் செய்வதில் போதிய வருமானம், லாபம் இல்லாமல், இத்தொழிலை விட்டு விட்டனர் அல்லது குறைத்து கொண்டனர். சிலர் வறுமையிலும், பலர் நஷ்டத்திலும் தோய்ந்து துவண்டு விட்டனர். லட்சக்கணக்கான டன் அரிசி, கோதுமை, சர்க்கரை இறக்குமதிக்கு செலவாகும் கோடிக்கணக்கான ரூபாயை, விவசாய நலனுக்கு செலவிட்டாலே போதும். விவசாயி ஊக்கம் பெற்று, உற்பத்தி பெருகும் நிலை உருவாகும். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகி விட்டது. மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளால், சர்க்கரை கிலோ 12.50 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது நடந்து ஆறு, ஏழு மாதங்களில் சர்க்கரை கிலோ 36 ரூபாய்க்கு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது வேடிக்கையாக உள்ளது. இதில், அரசியல்வாதிகளின் ஊழல்களும் அடக்கம்.


கடந்த ஆண்டுகளில், நம் நாட்டின் சர்க்கரை ஆலைகளின் லாபம் 30 கோடியிலிருந்து, 901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிக்கு தொடர்ந்து நஷ்டம். எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தகுந்த ஆதார விலையை அரசு அளிக்க வேண்டும். அதே சமயம் நுகர்வோர் வாங்கும் வகையில், விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல், இடைத்தரகர்களை குறைத்து அல்லது நீக்கி, அரசு செயல்பட வேண்டும். மேற்கண்ட இரு வழிகளையும் அரசு முக்கியத்துவம் கொடுத்து ஆராய வேண்டும்.


குளிர்சாதனப் பெட்டி தயாரிக்கும் நிறுவனம், அவர்களே விலை நிர்ணயிக்கின்றனர். தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம், தான் தயாரித்த அப்பெட்டிக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கு தங்க நகை வியாபாரிகளே, தங்கம் சார்ந்த தொழில் செய்பவர்களே விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், விவசாய நாடு என்று கூறிக் கொள்ளும் அரசு தான், நெல்லுக்கும், கோதுமைக்கும், கரும்புக்கும் விலை நிர்ணயம் செய்கிறது. குளிர்சாதன அறையில் உட்கார்ந்து, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விவசாயப் பொருளுக்கு கட்டுப்படியாகாத விலையை நிர்ணயம் செய்கின்றனர். உண்மையான விவசாயியை கலந்தாலோசிப்பதில்லை. விலை நிர்ணயத்தில், விவசாயியின் பங்கு அறவே இல்லை. உற்பத்தி செய்தவனுக்கு விலை கூற வழியில்லை. இப்படிப்பட்ட அரசின் அணுகுமுறையால், விவசாயம் பாதிப்படைந்து பல விவசாயிகள், நிலத்தை விற்று நகரத்திற்கு சென்று விட்டனர். பலர் பணப்பயிர் விவசாயத்துக்கு மாறி விட்டனர். மேலும் பலர், நிலத்தை ப்ளாட் போட்டு விற்று விட்டனர்.


விவசாய நிலப்பரப்பு குறைந்து விட்டது. விவசாயத்தில் லாபம் இல்லாததால் தான், கிராமவாசிகள் நகரத்திற்கு சென்று, நகரத்தில் ஜன நெருக்கடியை உருவாக்கி விட்டனர். விவசாயத்தில் கூலி வேலை செய்தவர்கள், மற்ற வேலைகளுக்கு சென்று, அதிக கூலி பெறுவதால் விவசாயத் தொழிலுக்கு வேலையாட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசின் 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டமும் காரணம். "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்' என்றார் காந்தி. ஆனால், இந்தியாவில் சரியான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத தலைவர்களால், விவசாயம் வஞ்சிக்கப்படுகிறது. விவசாயி ஆண்டுக்கு ஆண்டு, கடன் வாங்குகிறார். அரசும் வருடா வருடம் கடன் கொடுத்து, விவசாயியை கடனாளியாகவே வைத்திருக்கிறது. விவசாயி என்று தன்னிறைவு அடைகிறான் என்பது கேள்விக்குறியாகி விட்டது. விவசாயத்தை நலிவடையச் செய்து, விவசாயிகளை விவசாயத் தொழிலாளிகளை நகரத்தை நோக்கி விரட்டியது அரசு தான்.


பட்டுக்கோட்டையார் எழுதிய, "காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற பாடல், யதார்த்தத்தை உரைக்கிறது. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என பலரும், தங்கள் மகன்களை தங்கள் துறையிலேயே வளர்க்க விரும்புவர். ஆனால், ஒருபோதும் தன் மகனை விவசாயம் செய்ய விவசாயி ஊக்கப்படுத்துவதில்லை. தான் விளைவித்த நெல்லை வண்டியில் ஏற்றி, நான்கைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயி எடுத்துச் சென்றால், உடனே கொள்முதல் செய்வதில்லை. காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.


விவசாயி உற்பத்தி செய்த அந்த நெல் (அன்னலட்சுமி) மூட்டைகள், சாலை ஓரத்தில் அடுக்கப்பட்டு, எப்போது கொள்முதல் செய்வாரோ என்று காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில், இரண்டு அல்லது மூன்று நாள் கூட நெல்லுக்கு பாதுகாப்பாக, அம்மூட்டையின் மீது விவசாயி, உறங்குவதைப் பார்க்கலாம். அறுவடை செய்த நெல்லை தூய்மைப்படுத்த, காய வைக்க சரியான களம் இல்லாததால், நெடுஞ்சாலையில் பஸ் வழித்தடத்தில் நெல்லை சுத்தப்படுத்தவும், காய வைக்கவும் நேரிடுகிறது. இதனால் வாகனங்களும், பயணிகளுக்கும் கூட பல சிரமங்கள் ஏற்படுகின்றன.


ஒருவழியாக நெல் கொள்முதலுக்கு வந்தவுடன், மூட்டையை தராசில் தூக்கி வைத்து எடை போட, அரசால் நியமிக்கப்படும் ஊழியர்கள், தராசில் வைத்தவுடன் தன் இரு கைகளையும் சேர்த்து மூட்டையில் உள்ள நெல்லை எவ்வளவு அள்ள முடியுமோ (மூட்டைக்கு ஒரு முறை மட்டும்) அவ்வளவு தங்களுக்கு எடுத்து கொள்கின்றனர். அது நிச்சயம் ஒரு கிலோவுக்கு குறையாமல் இருக்கும். கொள்முதல் செய்யும் அலுவலரோ, ஒவ்வொரு மூட்டைக்கும் இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை, மாமூலாக வசூலித்து விடுவார். கொடுக்க மறுத்தால், "ஈரப்பதம் அதிகம், நெல் தரம் சரியில்லை...' எனக் கூறி, விவசாயியை மிரட்டி வளைத்து விடுவார்.


நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, பாடுபட்டு உற்பத்தி செய்த விளைப்பொருளை விற்க, லஞ்சம் கொடுக்கும் உற்பத்தியாளரை, விவசாயியை இந்நாட்டில் தான் பார்க்கலாம். பாவம் விவசாயி, அவனுக்கு இந்த அதிகாரி வர்க்க சூழ்ச்சிகளிலிருந்து விடுபட வழி தெரிவதில்லை; வழியும் இல்லை. வி.ஏ.ஓ., தலையாரி ஆகியவர்களை சரிகட்டி, ஆற்றுப் படுக்கையில் மிளகாய் பயிரிடுகிறான் விவசாயி. தன் மனைவி வந்து சட்னிக்கு பச்சை மிளகாய் பறிக்க வந்தால் கூட அதட்டுகிறான். மிளகாய் பழுத்து வற்றல் தயாரான பின், அதை வியாபாரிக்கு, அவர் கூறும் விலைக்கு, அதாவது குறைந்த விலைக்கு விற்கிறான். அந்த மிளகாய் மூட்டை, நகரத்திற்கு செல்கிறது. அங்கு மிளகாய் மூட்டையின் சாக்கு மாற்றப்படுகிறது. பிறகு பல மடங்கு விலை உயர்த்தி, கடைகளுக்கு விற்கப்படுகிறது. இப்போது மிளகாய் உற்பத்தி செய்த விவசாயியே, அதிக விலை கொடுத்து வாங்குகிறான். இதில் அதிக லாபம் அடைந்தவன், விவசாயியும் அல்ல; வாங்கி நுகரும் நாமும் அல்ல. இடையில் சில முதலைகள் ஏப்பமிட்டு விடுகின்றன. விவசாயியின் நிலைமை அந்தோ பரிதாபம்.


இப்படி தொடர்ந்து விவசாயி, பல்முனைத் தாக்குதலால் தாக்கப்படும் போது, தற்கொலை செய்யாமல் வேறு என்ன செய்வான்? "சுழன்றும் ஏர்பின்னது உலகம்; உழுவோன் உலத்தார்க்கு ஆணி' என்று வள்ளுவரும் இன்னும் பலவாறாக உயர்த்தி சொல்கிறார். ஆனால், விவசாயியை அரசு ஒருபுறம், சுயநல அரசியல்வாதிகள் ஒருபுறம், அதிகார வர்க்கம் ஒருபுறம் என, மும்முனைத் தாக்குதலை தொடுக்கின்றனர். இவற்றை எதிர்கொண்டு விவசாயி, தலை நிமிர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ, அந்நாளே இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெரும் நாளாகும்.


                                                                          - கோ.லட்சுமி நாராயணன், கல்வியாளர்

டிரேடிங் ப‌ற்றிய‌ சில‌ த‌க‌வ‌ல்க‌ள்

டிரேடிங் ப‌ற்றிய‌ சில‌ த‌க‌வ‌ல்க‌ள்

யுவா, சென்னை

டிரேடிங் (Trading) என்றால் என்ன ?

 
டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது - விற்பது அல்லது விற்பது - வாங்குவது. இதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.
பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.

 

Last Updated ( Thursday, 20 May 2010 08:34 )

Read more...

உயிர் கொலைகள்! ஆபத்தாகும் சாலைப்பயணங்கள்!

உயிர் கொலைகள்! ஆபத்தாகும் சாலைப்பயணங்கள்!

முன்பெல்லாம் செய்திகளில் சிலசமயங்களில் சாலை விபத்துகள் பற்றிப் படிப்போம் அல்லது கேட்போம். இப்போது படிக்கின்ற அல்லது பார்க்கின்ற செய்தியின் தொனியே தனி.

"தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் பலி. 40 பேர் காயம்...'' இந்த ரீதியில்தான் விபத்துகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன.


விபத்துகளில் ஓரிருவர்தான் பலி என்றால் அது ஒரு செய்தியாகவே எடுபடுவதில்லை. நொறுங்கிக் கிடக்கும் இருசக்கர வாகனங்களும், கார்களும், மூளியாகிப்போன பேருந்துகளும், உடல் சிதறிய மனித உருவங்களும், ரத்தக்குளங்களும் அன்றாடச் செய்தியாகிவிட்ட நிலையில் நம் மனசெல்லாம் மரத்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது.

Last Updated ( Thursday, 13 May 2010 06:17 )

Read more...

எரிமலை மேகங்களில் விமானங்கள் பயணிக்ககூடாதா? ஏன்?

எரிமலை மேகங்களில் விமானங்கள் பயணிக்ககூடாதா? ஏன்?
நிஷா, ஸ்விஸ்

ஐஸ்லாந்து வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐஸ்லாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும். ஐஸ்லாந்து 103,000 பரப்பளவோடு 312,8511 மக்கள் தொகையைக்கொண்ட நாடு.  தலை நகரம் ரெய்க்யாவிக்

Last Updated ( Friday, 23 April 2010 20:16 )

Read more...

வந்தாரை வாழவைத்து இருப்போரை ஓடவைக்கிறதா தமிழகம்?

தமிழகத்தில் தொழில்துவங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறை .
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்தில் தொழில் தொடங்க போட்டி"
வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதால் லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
தினிசரி நாளிதழ்களிலும், தொலைகாட்சிகளிலும் முக்கிய செய்திகளாக இடம்பெறுகின்றன இத்தகவல்கள்.

Last Updated ( Tuesday, 06 April 2010 16:44 )

Read more...

கச்சா விலை விர்ர்..........

கச்சா எண்ணெய் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்தது.  அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், அமெரிக்காவில்  வேலை இழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அமெரிக்காவில் 68,000 பேர் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்று மதிப்பீடு  செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாதத்தில் 36,000 பேருக்கு மட்டுமே வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Read more...

ரின் விளம்பரத்துக்கு தடை!

சமீபகாலமாகவே ஒரு பிராண்ட்களை மற்ற பிராண்ட்கள் சரியில்லை என்று டிவியில் தாக்குவது  பெருகிவருகிறது.
தற்போது `டைடு' பிராண்டை தாக்கும், இந்துஸ்தான் னிலீவர் நிறுவனத்தின் (எச்..எல்) ரின் சோப்புத் தூள் விளம்பரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ...
அண்மையில், எச்..எல். நிறுவனம் அதன் ரின் சோப்புத் தூள் குறித்த விளம்பரம் ஒன்றை நாடு முழுவதுமாக பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியிட்டது. தமிழ்நாட்டிலும் முன்னணி டி.வி. சேனல்களில் இந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. புராக்டர் அண்டு கேம்பிள் (பி-ஜி) நிறுவனத்தின் டைடு பிராண்டு சலவைத் தூளை விட ரின் சோப்புத் தூளே சிறந்தது என்பது போல் அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

Last Updated ( Sunday, 07 March 2010 06:49 )

Read more...

தமிழ் இணைய பயிலரங்கு வரும் சனி்க்கிழமை அன்று

தமிழ் இணைய பயிலரங்கு வரும் சனி்க்கிழமை அன்று

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் எதிர்வரும் சனவரி
30,காரி(சனிக்)கிழமை நடைபெற உள்ளது..மிகச் சிறந்த தமிழ் அறிஞர்கள் உலவிய இடத்தில் நின்று  தமிழ் இணைய வளர்ச்சிக்குக் குரல்கொடுப்பது சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.நிகழ்ச்சி விபரம்

Read more...

அவதார் -ன் அவதாரம்

எஸ்கா
அவதார். ஹாலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர் 1 & 2 படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்தாக எடுத்திருக்கும் "அவதார்" இது. படம் பற்றி பல இடங்களில் விமர்சனம் படித்திருப்பீர்கள். பலர் படமே பார்த்திருப்பீர்கள். ஆக, இங்கே அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. வசூல் மற்றும் சில டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.. வசூல் பற்றி இப்போதைக்கு சிம்பிளாகச் சொன்னால் "பிளந்து கட்டுகிறது". டெக்னிகல் விஷயங்கள் "சான்ஸே இல்ல" ரகம்.
Read more...
 

குறை கூறியவருக்கு அபராதம்!

தனியார் தொலைபேசி நிறுவன சேவையில் குறைபாடு  இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சாய் நரசிம்மன் மயிலாப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார்அளித்தார்.
Read more...

விழுகிறதா துபாய்....?

-எஸ்கா

வடிவேல் காமெடியில் வருவது போல  இன்றைய நிலையில் துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து என எங்கெங்கும் வியாபித்திருப்பது துபாயின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் தான். சமீபத்தி்ல் துபாயில் புயலைக் கிளப்பிய பொருளாதாரப் பிரச்சினையை துபாய் கடன் குமிழ் (Dubai Debt Bubble) என வர்ணிக்கின்றன மீடியாக்கள்.
Read more...

ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?

கோவிலுக்குப் போனால் செருப்பைப் பாதுகாக்க இரண்டு ரூபாய் தந்து விட்டு வரும் நம்மை, பிச்சைக்காரர்கள் கேட்டால் கூட ஒரு முழு ரூபாயை அநாயாசமாக தூக்கி எறியும் நம்மை, பஸ் கண்டக்டரிடம் கீப் த சேஞ்ச் என்று ஐம்பது பைசாவை விட்டு விட்டு வரும் நம்மை, ஒற்றை பைசாவையே கண்ணில் பார்த்தறியாத நம்மை, அதன் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வந்த நம்மை இன்றைய மொபைல் நிறுவனங்கள் மீண்டும் பைசாக்களின் காலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

Read more...

விர்ர்ர்.......விலைவாசி..........

விர்ர்ர்.......விலைவாசி..........
        இந்த பரபரப்பில் நாட்டில் கடும் விஷமாக பரவி வரும் விலை வாசி உயர்வை பற்றி தான் எந்த அரசும் கவனிக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென பல மடங்கு உயர்ந்து உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கிறது. இதை மக்களுக்கு அறிவித்தாகவேண்டிய ஊடகங்கள் அனைத்தும் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருவதால் பாமர மக்களுக்கு விலைவாசி உயர்வைப்பற்றிய தகவல்கள் சரியாக தெரியவில்லை

Last Updated ( Tuesday, 10 November 2009 18:16 )

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 6

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED