11 வாரங்களுக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. வியாழன் (26.03.09) 335 புள்ளிகள் கூடியதால் குறியீட்டெண் 10,003-ஆக உயர்ந்தது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 97 புள்ளிகள் அதிகரித்ததால் குறியீட்டெண் 3,082 புள்ளிகளைத் தொட்டது.
TATA Motors 7.84%, L&T 6.10%, Sterlite 5.97%, TCS 5.94%, BHEL 5.85%, TATA Power 5.57%, Wipro 5.03%, TATA Steel 5% -ம் உயர்ந்தன.
இதேபோல ONGC, Maruthi Suzuki, Wipro நிறுவனப் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன.
அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. வியாழன் (மார்ச் 25) ரூ. 348.65 கோடியை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
ஆசிய சந்தையில் பங்கு விற்பனை அதிகரித்ததும் மும்பை பங்கு விற்பனைக்கு முக்கியக் காரணமாகும்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





