அந்த நிதியாண்டின் இறுதியில் டி&மேட் கணக்குகளின் எண்ணிக்கை 1.47 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 38 சதவீதம் அதிகம். ஆனால், 2008&09 நிதியாண்டில் பங்குச் சந்தை பாதாளத்துக்கு சரிந்தது. இதனால் டீமேட் கணக்குகளின் வளர்ச்சி வெறும் 7.8 சதவீதம் அதிகரித்து, 1.52 கோடியானது. மேலும் நடைமுறையில் உள்ள கணக்குகளில் 30 சதவீதம் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. 70 சதவீத கணக்குகள் பரிவர்த்தனை ஏதுமின்றி முடங்கின.
பங்கு பரிவர்த்தனை இல்லாத நிலையிலும், தரகு நிறுவனங்கள் டீமேட் கணக்கு வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக ஒரு தொகையை வசூலிக்கின்றன. இதனால் சிலர் இந்த கணக்குகளை முடித்து விடுகின்றனர் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





