Saturday
Jul 31st
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மவுசு குறையுதா பங்குச்சந்தை?

E-mail Print PDF

கடந்த வரும் ஆரம்பம் முதல் இன்று  ஏற்பட்டு வரும் தொடர் வீழ்ச்சியால் பங்குசந்தையில் தற்போது மந்தநிலை நிலவி வருகிறது. இந்நிலையில்  சந்தை வீழ்ச்சி காரணமாக 70%டீமேட் கணக்குகள் முடங்கியுள்ளதாக பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், புதிய பங்குகளை (ஐபிஓ) வாங்கவும், சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதற்கு வசதியாகவும் டீமேட் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பங்குச் சந்தையின் வேகமான வளர்ச்சி காரணமாக, கடந்த 2007&08 நிதியாண்டில் மட்டும் 41 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் துவங்கப்பட்டன.

அந்த நிதியாண்டின் இறுதியில் டி&மேட் கணக்குகளின் எண்ணிக்கை 1.47 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 38 சதவீதம் அதிகம்.   ஆனால், 2008&09 நிதியாண்டில் பங்குச் சந்தை பாதாளத்துக்கு சரிந்தது. இதனால் டீமேட் கணக்குகளின் வளர்ச்சி வெறும் 7.8 சதவீதம் அதிகரித்து, 1.52 கோடியானது.  மேலும் நடைமுறையில் உள்ள கணக்குகளில் 30 சதவீதம் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. 70 சதவீத கணக்குகள் பரிவர்த்தனை ஏதுமின்றி முடங்கின.
பங்கு பரிவர்த்தனை இல்லாத நிலையிலும், தரகு நிறுவனங்கள் டீமேட் கணக்கு வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக ஒரு தொகையை வசூலிக்கின்றன.  இதனால் சிலர் இந்த கணக்குகளை முடித்து விடுகின்றனர் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Wednesday, 22 April 2009 10:50 )  
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED