ஒவ்வொரு தேர்தலிலும் புதிய புதிய கட்சிகள், புதிய புதிய கொள்கைகள், புதிய உத்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.
ஆனால் இத்தேர்தல் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது. திராவிட கட்சிகள், நடிகர்களின் கட்சிகள், சாதி சங்கங்களின் கட்சிகள் என்று பலமுனை போட்டி நிலவி வருகிறது. இப்போட்டியில் புதியதாக வந்து சேர்ந்திருக்கிறது பிரமிட் பார்ட்டி ஆப் இந்தியா.
இந்தியா வல்லரசாக மாற ஆன்மீகவாதிகள் தான் நாட்டை ஆள வேண்டும் என்ற கோஷத்தோடு இத்தேர்தலில் களமிறங்கியுள்ளது பிரமிட் பார்ட்டி
.பிரம்மர்ஷி பத்ரிஷி எனும் நபரால் 1990 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பிரமிட் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு ஆன்மீகவாதிகள்தான் நாடாளவேண்டும் என்று குரல் கொடுத்ததோடு நில்லாமல் இந்தியா முழுவதும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 50 இடங்கள் போட்டியிடும் அவ்வமைப்பினர் தமிழ்நாட்டில் 8 இடங்களில் போட்டியிடுகின்றனர்.
அவர்களின் முக்கிய நோக்கமே எல்லா இடங்களிலும் தியானம்த்தை கட்டாயமாக்குவதுதான்.
இவ்வாறு தியானத்தின் மூலம் மக்களை ஆன்மீக விழிப்புணர்வு பெற்று விடுதலையடைய வேண்டும், நாடும், நாட்டு மக்களும் தியானத்தின் துணைக்கொண்டு நம்உள்ளே இருக்கும் இறைவனை உணர்ந்து ஒவ்வொருவரும் கடவுள்தன்மையை பெற வேண்டும். என்று வலியுறுத்துவதுதான் இவர்களின் நோக்கம். நாட்டில் எனவே உலகின் ஆன்மீக குருவாகவிளங்கவும் நமது அரசியல தூய்மைப்படுத்தபட வேண்டும். நல்லவர்களும், ஆன்மீகவாதிகளும் நாட்டை ஆள வேண்டும் என்கின்றனர் ப்ரமிட் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர்.
ம் ஒர் புதுமையான கோஷம்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...