Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

100% லாபம் அளித்த 400 கம்பெனி பங்குகள்

E-mail Print PDF

கடந்த வருடம் முதல் வீழ்ச்சியில் இருந்த பங்குச் சந்தை கடந்த 6 மாதங்களுக்கு முன் இருந்த விலையில் இருந்து 400 கம்பெனிகளின் பங்குகள் இப்போது 100 சதவீத லாபத்தை அளித்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மிகக் குறைந்த அளவாக 7,200 புள்ளிகளுக்குச் சரிந்தது. அப்போது மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 2,600 கம்பெனிகளில் பெரும் பாலானவற்றின் பங்கு மதிப்பு பெரிதும் சரிந்திருந்தது.

பிறகு, பங்குச் சந்தை ஓரளவு சரிவை சமாளித்து முன்னேறத் தொடங்கியது. கடந்த 4 மாதங்களில் அது அதிவேகமாக முன்னேற்றம் கண்டு இப்போது சுமார் 12,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, 2,600 கம்பெனிகளின் பங்குகளில் 405 கம்பெனிகளின் பங்கு மதிப்பு கடந்த அக்டோபரில் இருந்த விலையைவிட இப்போது 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

அவற்றில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், செயில், மகிந்திரா, ஸ்டெர்லைட், ஐசிஐசிஐ வங்கி உட்பட 20 பெரிய நிறுவனங்களின் பங்குகளும், சுஸ்லான், பான்டலூன், யுனிடெக் உட்பட 30 நடுத்தர நிறுவனங்களின் பங்குகளும் அடங்கும். மொத்தமுள்ள 2,600 கம்பெனி பங்குகளில் 6ல் ஒன்றின் பங்கு விலை கடந்த 6 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பங்கு வர்த்தக நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பங்குச் சந்தை நிபுணர்களும் அரசும் எடுத்த நடவடிக்கை களால் சர்வதேச பொரு ளாதார நெருக்கடியில் இருந்து பங்குச் சந்தை வர்த்தகம் வேகமாக மீண்டு முன்னேறி வருகிறது. இதனால் பெரும்பாலான நிறுவன பங்குகள் மதிப்பு எதிர் பாராத வேகத்தில் உயர்ந்து வருகிறது’’ என்றார்.

மும்பை, மே 9: பங்குச் சந்தையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இருந்த விலையில் இருந்து 400 கம்பெனிகளின் பங்குகள் இப்போது 100 சதவீத லாபத்தை அளித்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மிகக் குறைந்த அளவாக 7,200 புள்ளிகளுக்குச் சரிந்தது. அப்போது மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 2,600 கம்பெனிகளில் பெரும் பாலானவற்றின் பங்கு மதிப்பு பெரிதும் சரிந்திருந்தது.

பிறகு, பங்குச் சந்தை ஓரளவு சரிவை சமாளித்து முன்னேறத் தொடங்கியது. கடந்த 4 மாதங்களில் அது அதிவேகமாக முன்னேற்றம் கண்டு இப்போது சுமார் 12,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, 2,600 கம்பெனிகளின் பங்குகளில் 405 கம்பெனிகளின் பங்கு மதிப்பு கடந்த அக்டோபரில் இருந்த விலையைவிட இப்போது 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

அவற்றில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், செயில், மகிந்திரா, ஸ்டெர்லைட், ஐசிஐசிஐ வங்கி உட்பட 20 பெரிய நிறுவனங்களின் பங்குகளும், சுஸ்லான், பான்டலூன், யுனிடெக் உட்பட 30 நடுத்தர நிறுவனங்களின் பங்குகளும் அடங்கும். மொத்தமுள்ள 2,600 கம்பெனி பங்குகளில் 6ல் ஒன்றின் பங்கு விலை கடந்த 6 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பங்கு வர்த்தக நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பங்குச் சந்தை நிபுணர்களும் அரசும் எடுத்த நடவடிக்கை களால் சர்வதேச பொரு ளாதார நெருக்கடியில் இருந்து பங்குச் சந்தை வர்த்தகம் வேகமாக மீண்டு முன்னேறி வருகிறது. இதனால் பெரும்பாலான நிறுவன பங்குகள் மதிப்பு எதிர் பாராத வேகத்தில் உயர்ந்து வருகிறது’’ என்றார்.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED