தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நஷ்டத்தை சந்திக்கும் நிறுவனங்களை பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்குவதற்கு நிதி அமைச்சகம் செபிக்கு அனுமதி அளித்துள்ளது.
நிறுவனங்களை பட்டியலிலிருந்து நீக்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நிதி அமைச்சகம் செபிக்கு அனுப்பி உள்ளது. அந்த விபரத்தில்
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகள் நஷ்ட மடைந்தால், அதை பட்டியலிலிருந்து நீக்க செபிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேல் பங்கு வர்த்தகம் நடைபெறாத மற்றும் மூன்று ஆண்டுகளில் அடிக்கடி வர்த்தகம் நடைபெறாத நிறுவனங்களையும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
எனினும், பட்டியலில் குறைந்தது மூன்று ஆண்டுகள் இடம் பெற்றிருப்பதுடன், மூன்றில் இரண்டு பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலைப் பெற்றுதான் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிறுவன முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்க முன்வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம், நியாயமான விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
நிறுவனங்களை பட்டியலிலிருந்து நீக்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நிதி அமைச்சகம் செபிக்கு அனுப்பி உள்ளது. அந்த விபரத்தில்
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகள் நஷ்ட மடைந்தால், அதை பட்டியலிலிருந்து நீக்க செபிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேல் பங்கு வர்த்தகம் நடைபெறாத மற்றும் மூன்று ஆண்டுகளில் அடிக்கடி வர்த்தகம் நடைபெறாத நிறுவனங்களையும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
எனினும், பட்டியலில் குறைந்தது மூன்று ஆண்டுகள் இடம் பெற்றிருப்பதுடன், மூன்றில் இரண்டு பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலைப் பெற்றுதான் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிறுவன முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்க முன்வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம், நியாயமான விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...