Last Updated ( Thursday, 10 March 2011 17:48 )
Read more...Last Updated ( Monday, 07 March 2011 20:45 )
Last Updated ( Thursday, 17 February 2011 17:21 )
Read more...மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஏர் கம்ப்ரசர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எல்ஜீ எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு ஒரு பழைய பங்கிற்கு ஒரு புதிய பங்கு என்ற விகிதத்தில் இலவச பங்குகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது. நிறுவனம் அதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பணியாளர்களுக்கு விருப்ப அடிப்படையில் பங்குகளை ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.30.20 கோடியை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.17.30 கோடியாக இருந்தது
- எஸ்கா
பணமின்றி அமையாது உலகு. எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். ஆனால் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?. இல்லையே. கஷ்டப்பட்டு உழைத்துத்தானே சம்பாதிக்க வேண்டும். சரி.. உழைத்து உழைத்து சம்பாதித்து பெட்டியில் போட்டு வைத்தால் என்னதான் ஆகும்? நாளாக நாளாக உளுத்துத்தான் போகும். அதை வங்கியில் போட்டு சேமித்து வைத்தால்? பத்திரமாக இருக்கும் தான். ஆனால் வட்டியே கிடைத்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலைவாசியில் அதன் மதிப்பு அரோகரா தான். அப்போது என்ன செய்யலாம்? எப்படி அதை வளர்க்கலாம்? அல்லது குறைந்த பட்சம் மதிப்பு குறையாமல் பாதுகாக்கலாம்? அதற்கு அந்தப் பணத்தை முதலீடு செய்வது தான் ஒரே வழி. அதை நாமே செய்யலாமா? செய்யலாமே.