Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மியூச்சுவல் பண்ட்

இன்ப்ரா பண்ட் மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா திட்டம்

இன்ப்ரா பண்ட் மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா  திட்டம்
உள்கட்டமைப்பு வசதிகளுக்காகபிரைவேட் ஈக்விட்டி மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா திட்டமிட்டுள்ளது.
ஜப்பானின் சுமித்டோமோ மிட்சுய் வங்கிக் குழுமம் மற்றும் கனடாவின் புரூக்பில்ட் குமுமம், மகேந்திரா குழுமம் மூன்றும் சேர்ந்து 22.5% பங்குகள் மூலம் $300 மில்லியன் திரட்டப்படும் என மகேந்திரா குழுமம் தெரிவித்துள்ளது.
ஆசியா அளவில் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் அடுத்த ஜந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக $1 டிரில்லியன் தேவைப்படும். உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க, தனியார் வசம் சில பகுதிகளை வெளியிடுவதன் மூலம் நாட்டை வளப்படுத்த முடியும்.
சைனா 11% உள்கட்டமைப்பிற்கு செலவிடுகையில் இந்தியா 6% மட்டுமே செலவழிக்கிறது.
கோடாக் மகேந்திரா சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நீர் சுத்தகரிப்பு, குப்பைககள் சுத்தகரிப்பு,மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் எனத் தெரிகிறது.
கோடாக் முதலீட்டாளர்கள் அறிவுரைக் குழுமம் உள்நாட்டு முதலீட்டையும்,  யு கே வில் உள்ள கோடாக் மகேந்திரா குழுமம் வெளிநாட்டு முதலீட்டையும் கவனிக்கும் என  அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பிரைவேட் ஈக்விட்டி மூலம் $300 மில்லியன் திரட்ட கோடாக் மகேந்திரா திட்டமிட்டுள்ளது.

ஜப்பானின் சுமித்டோமோ மிட்சுய் வங்கிக் குழுமம் மற்றும் கனடாவின் புரூக்பில்ட் குமுமம், மகேந்திரா குழுமம் மூன்றும் சேர்ந்து 22.5% பங்குகள் மூலம் $300 மில்லியன் திரட்டப்படும் என மகேந்திரா குழுமம் தெரிவித்துள்ளது.

Last Updated ( Thursday, 10 March 2011 17:48 )

Read more...
 

54% குறைந்த பிரைவேட் ஈக்விட்டி முதலீடு

54% குறைந்த பிரைவேட் ஈக்வூட்டி முதலீடு
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய நிறுவனங்கள் பிரைவேட் ஈக்வூட்டியில் முதலீடு செய்வது 54% குறைந்து $324 மில்லியன்களாக உள்ளது.
2011 ஆம் ஆண்டில் இரண்டாவது மாதத்தில் பிரைவேட் ஈக்வூட்டி 54% குறைந்துள்ளது.கடந்த வருடத்தில் இதே காலத்தில் பிரைவேட் ஈக்வூட்டி முதலீடு $699 மில்லியன்களாக இருந்தது. வர்த்தக ஒப்பந்தங்களும் குறைந்த அளவிலே கையெழுத்தாகி உள்ளது இந்த வருடம் பிப்ரவரியில்.
ஜனவரி - பிப்ரவரி மாத முதலீடுகள் கடந்த வருடம் $1.15 பில்லியனிலிருந்து குறைந்து இந்த வருடம் $755 ஆக உள்ளது.
தற்போது வங்கி,நிதித் துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய நிறுவனங்கள் பிரைவேட் ஈக்விட்டியில் முதலீடு செய்வது 54% குறைந்து $324 மில்லியன்களாக உள்ளது.

2011 ஆம் ஆண்டில் இரண்டாவது மாதத்தில் பிரைவேட் ஈக்விட்டி 54% குறைந்துள்ளது.கடந்த வருடத்தில் இதே காலத்தில் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு $699 மில்லியன்களாக இருந்தது. வர்த்தக ஒப்பந்தங்களும் குறைந்த அளவிலே கையெழுத்தாகி உள்ளது இந்த வருடம் பிப்ரவரியில்.

ஜனவரி - பிப்ரவரி மாத ஈக்வூட்டி முதலீடுகள் கடந்த வருடம் $1.15 பில்லியனிலிருந்து குறைந்து இந்த வருடம் $755 ஆக உள்ளது.

தற்போது வங்கி,நிதித் துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது.

Last Updated ( Monday, 07 March 2011 20:45 )

வெள்ளி, பிளாட்டினம் பங்குகள் :ரிலையன்ஸ் எம் எப்

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி, பிளாட்டினம் பங்குகள் :ரிலையன்ஸ் எம் எப்
அனில் திருபாய் அம்பானி குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இன்று கோல்ட் சேவிங்ஸ் பண்ட் என்னும் புதிய பங்கை வெளியிட்டது.
ரிலையன்ஸ் காப்பிடல் இயக்குனர் சந்தீப் சிக்கா கூறுகையில்,
இன்று கோல்ட் மியூச்சுவல் பண்டை வெளியிட்டுள்ளோம்.வெள்ளி, பிளாட்டினம் பண்டுகளில் முதலீடு செய்ய செபி இன்னும் அனுமதி அளிக்கவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போது வெள்ளி, பிளாட்டினம் பண்டுகள் நிச்சயமாக வெளியிடப்படும்.
டிமேட் கணக்கு மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதை மாற்றி, டிமேட் கணக்கு இல்லாமல் மாதத்திற்கு ரூ.100 செலுத்தி தங்கத்தில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் வழிவகுத்து உள்ளது.
சேமிப்பு மற்றும் டிமேட் கணக்குகள் இல்லாமல் பங்கு வர்த்தகம் செய்யும் இம்முறை சந்தையில் புதிய மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
அக்டோபர் 2010 -ல் ஒரு பேட்டியில் சிக்கா கூறியது:
1.8 கோடி டிமேட் கணக்குகளில் 40% மட்டுமே செயலில் உள்ளது .
டிமேட் கணக்கில்லாத தங்க பங்கு வர்த்தகம் பிப்ரவரி 14 -ல் தொடங்கி பிப்ரவரி 28 -ல் முடியும்.
அனில் திருபாய் அம்பானி குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இன்று கோல்ட் சேவிங்ஸ் பண்ட் என்னும் புதிய பங்கை வெளியிட்டது. ரிலையன்ஸ் காப்பிடல் இயக்குனர் சந்தீப் சிக்கா கூறுகையில், இன்று கோல்ட் மியூச்சுவல் பண்டை வெளியிட்டுள்ளோம்.வெள்ளி, பிளாட்டினம் பண்டுகளில் முதலீடு செய்ய செபி இன்னும் அனுமதி அளிக்கவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போது வெள்ளி, பிளாட்டினம் பண்டுகள் நிச்சயமாக வெளியிடப்படும்

Last Updated ( Thursday, 17 February 2011 17:21 )

Read more...

எல்ஜீ எக்யூப்மெண்ட்ஸில் இலவச பங்குகள் வெளியீடு

மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஏர் கம்ப்ரசர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எல்ஜீ எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு ஒரு பழைய பங்கிற்கு ஒரு புதிய பங்கு என்ற விகிதத்தில் இலவச பங்குகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது. நிறுவனம் அதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பணியாளர்களுக்கு விருப்ப அடிப்படையில் பங்குகளை ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.30.20 கோடியை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.17.30 கோடியாக இருந்தது

மியூச்சுவல் பண்டுகளும் ஃபண்ட் மேனேஜர்களும்.

- எஸ்கா

பணமின்றி அமையாது உலகு. எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். ஆனால் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?. இல்லையே. கஷ்டப்பட்டு உழைத்துத்தானே  சம்பாதிக்க வேண்டும். சரி.. உழைத்து உழைத்து சம்பாதித்து பெட்டியில் போட்டு வைத்தால் என்னதான் ஆகும்? நாளாக நாளாக உளுத்துத்தான் போகும். அதை வங்கியில் போட்டு சேமித்து வைத்தால்? பத்திரமாக இருக்கும் தான். ஆனால் வட்டியே கிடைத்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலைவாசியில் அதன் மதிப்பு அரோகரா தான். அப்போது என்ன செய்யலாம்? எப்படி அதை வளர்க்கலாம்? அல்லது குறைந்த பட்சம் மதிப்பு குறையாமல் பாதுகாக்கலாம்? அதற்கு அந்தப் பணத்தை முதலீடு செய்வது தான் ஒரே வழி. அதை நாமே செய்யலாமா? செய்யலாமே.

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 3

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED