அனில் திருபாய் அம்பானி குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இன்று கோல்ட் சேவிங்ஸ் பண்ட் என்னும் புதிய பங்கை வெளியிட்டது. ரிலையன்ஸ் காப்பிடல் இயக்குனர் சந்தீப் சிக்கா கூறுகையில், இன்று கோல்ட் மியூச்சுவல் பண்டை வெளியிட்டுள்ளோம்.வெள்ளி, பிளாட்டினம் பண்டுகளில் முதலீடு செய்ய செபி இன்னும் அனுமதி அளிக்கவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போது வெள்ளி, பிளாட்டினம் பண்டுகள் நிச்சயமாக வெளியிடப்படும்
.
டிமேட் கணக்கு மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதை மாற்றி, டிமேட் கணக்கு இல்லாமல் மாதத்திற்கு ரூ.100 செலுத்தி தங்கத்தில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் வழிவகுத்து உள்ளது.
சேமிப்பு மற்றும் டிமேட் கணக்குகள் இல்லாமல் பங்கு வர்த்தகம் செய்யும் இம்முறை சந்தையில் புதிய மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
அக்டோபர் 2010 -ல் ஒரு பேட்டியில் சிக்கா கூறியது:
1.8 கோடி டிமேட் கணக்குகளில் 40% மட்டுமே செயலில் உள்ளது .
டிமேட் கணக்கில்லாத தங்க பங்கு வர்த்தகம் பிப்ரவரி 14 -ல் தொடங்கி பிப்ரவரி 28 -ல் முடியும்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





