Thursday
Mar 11th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடந்த மாதத்தில் ரூ.47 ஆயிரம் கோடி வாபஸ் : ஆம்பி தகவல்

E-mail Print PDF
பங்குசந்தையில் ஏற்பட்டு சரிவை தொடர்ந்து முதலீட்டாளர்கள் கடந்த ஒரே மாதத்தில் மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து ரூ.47 ஆயிரம் கோடியை திரும்பப் பெற்றுள்ளதாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் (ஆம்பி) தெரிவித்துள்ளது. இது குறித்து ஆம்பியின் மாதாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியால் பங்குச் சந்தை, தொடர்ந்து கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் நஷ்டத்திலிருந்து மீள்வதற்காக கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டு முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றன. இதனால் கலக்கமடைந்த சிறு முதலீட்டாளர்களும் தங்கள் கைவசம் உள்ள யூனிட்களை நஷ்டத்தை பொருட்படுத்தாமல் அதிக அளவில் விற்கத் தொடங்கி உள்ளனர். இதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த அக்டோபர் மாதத்தில் 5 லட்சம் கோடிக்குக் கீழே சரிந்து, ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 901 கோடியாகி உள்ளது.
பங்குச் சந்தை வீழ்ச்சியால், மதிப்பு குறைந்து ஒரே மாதத்தில் ரூ.97 ஆயிரம் கோடி (18 சதவீதம்) சரிவடைந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து ரூ.46 ஆயிரத்து 793 கோடியை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.

இது இந்த நிதியாண்டில் ஒரே மாதத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ள அதிக அளவு தொகையாகும். செப்டம்பர் மாதத்தில் ரூ.45 ஆயிரத்து 655 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக நிலையான வருமானம் தரக்கூடிய திட்டங்களிலிருந்துதான் அதிக அளவு தொகை வெளியில் எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும், லிக்விட் திட்டங்களில் பணத்தை முதலீட்டாளர்கள் எடுப்பது குறைந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.26,665 கோடியாக இருந்த தொகை, அக்டோபரில் ரூ.19,675 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும் கடந்த மாதத்தில் இத்திட்டங்களில் ரூ.3 ஆயிரத்து 256 கோடி முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தை வீழ்ச்சியால் சொத்து மதிப்பு சரிந்தது, முதலீட்டாளர்கள் யூனிட்களை விற்றது மற்றும் புதிய திட்டங்களில்
முதலீடு செய்வது குறைந்தது ஆகிய காரணங்களால், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடந்த மாதத்தில் கடுமையாக சரிவடைந்துள்ளது என டாரஸ் மியூச்சுவல் பண்ட் இயக்குநர் குப்தா தெரிவித்துள்ளார்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


ட்விட்டரில் தொடர

குட்டி ad

Low Cost Webhosting
Webhosting @ 499

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED