வெளிநாட்டினர் இந்திய பங்கு சந்தையில் நேரடி முதலீடு
வரும் 15ம் தேதி முதல் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அன்னிய நிதி முதலீட்டாளர்கள் என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்ட துணை கணக்குகள் மூலமே வெளிநாட்டினர் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தனர்.
புத்தாண்டு பரிசாக வெளிநாட்டு தனிநபர்கள் நேரடியாக இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பங்கு வர்த்தகத்தின் அதிக ஏற்ற தாழ்வை குறைக்கவும், முதலீட்டாளர் வரிசையை விரிவாக்கவும் அன்னிய தனி நபர் நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய பங்கு சந்தைகளில் 80 நாடுகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். ஒரு வெளிநாட்டு நபரோ, அறக்கட்டளையோ ஒரு டிமேட் கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
வரும் 15ம் தேதி முதல் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


