Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பங்குச் செய்திகள்

வெளிநாட்டினர் இந்திய பங்கு சந்தையில் நேரடி முதலீடு

 

வெளிநாட்டினர் இந்திய பங்கு சந்தையில் நேரடி முதலீடு
வரும் 15ம் தேதி முதல் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அன்னிய நிதி முதலீட்டாளர்கள் என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்ட துணை கணக்குகள் மூலமே வெளிநாட்டினர் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தனர்.
புத்தாண்டு பரிசாக வெளிநாட்டு தனிநபர்கள் நேரடியாக இந்திய பங்கு சந்தையில் முதலீடு  செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பங்கு வர்த்தகத்தின் அதிக ஏற்ற தாழ்வை குறைக்கவும், முதலீட்டாளர் வரிசையை விரிவாக்கவும் அன்னிய தனி நபர் நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய பங்கு சந்தைகளில் 80 நாடுகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். ஒரு வெளிநாட்டு நபரோ, அறக்கட்டளையோ ஒரு டிமேட் கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
வரும் 15ம் தேதி முதல் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Read more...

வரியில்லா பங்குகள் நாளை முதல் விற்பனை : பவர் பைனான்ஸ் கார்பரேஷன்

வரியில்லா பங்குகள் நாளை முதல் விற்பனை : பவர் பைனான்ஸ் கார்பரேஷன்
ரூ.1,000 கோடி மதிப்பிலான வரியில்லா பங்குகளை நாளை முதல் விற்கவுள்ளது பவர் பைனான்ஸ் கார்பரேஷன்.
இது குறித்து அந்நிறுவன தலைவர் ஆர். நாகராஜன் கூறுகையில்,
ரூ.1,000 கோடி மதிப்பிலான வரியில்லா பங்குகளை நாளை முதல் விற்கவுள்ளோம். ஜனவரி 16ம் தேதி வரை இப்பங்குகள் விற்பனையில் இருக்கும்.
நாட்டின் முன்னணி மின்சார பிரிவு நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்பரேஷன் ரூ.5,000 கோடிக்கு வரியில்லா பங்குகள் விற்க அனுமதி பெற்றுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பரில் விற்கப்பட்ட பங்குகள் மூலம் ரூ.967 கோடி திரட்டியுள்ளது இந்நிறுவனம்.
10 வருட, 15 வருட பங்குகளுக்கு முறையே 8.20%, 8.30% ரிட்டன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாகராஜன் தெரிவித்தார்.
ரூ.1,000 கோடி மதிப்பிலான வரியில்லா பங்குகளை நாளை முதல் விற்கவுள்ளது பவர் பைனான்ஸ் கார்பரேஷன்.
Read more...

முதலீட்டுக்கு $100 மில்லியன் திரட்ட திவ்யஸ்ரீ டெவலப்பர்ஸ் முடிவு

முதலீட்டுக்கு $100 மில்லியன் திரட்ட திவ்யஸ்ரீ டெவலப்பர்ஸ் முடிவு
பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான திவ்யஸ்ரீ டெவலப்பர்ஸ் அடுத்த நான்கு வருடங்களில் முதலீட்டு பணிகளுக்காக $100 மில்லியன் திரட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து திவ்யஸ்ரீ நிறுவன தலைமை செயல் இயக்குனர் பாஸ்கர்  ராஜு கூறுகையில்,
வரும் 2012 முதலில் ஈக்விட்டி பங்குகள் மூலம் குறைந்தபடசம் $30 மில்லியன் திரட்ட முடிவு செய்துள்ளோம். ரூ.1,000 கோடி மதிப்பிலான திவ்யஸ்ரீ நிறுவனத்தில் சர்வதேச ஈக்விட்டி நிறுவனமான டிபிஜி ஆக்ஸான் 2007ம் ஆண்டு செய்துள்ள $100 மில்லியனைத் திரும்ப பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த நான்கு வருடங்களாக எங்களுக்கும் ஆக்ஸான் நிறுவனத்துக்கும் உறவு நல்ல முறையில் இருக்கையில், முதலீட்டை திரும்பப் பெறுவது குறித்து ஆக்ஸான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தனியார் நிறுவனமான ஆக்ஸான் முதலீட்டை திரும்ப பெறும் நிலையில் பாதி பங்குகளை திவ்யஸ்ரீ நிறுவனமும், மீதியிருக்கும் பங்குகளை தனியார் பங்கு சந்தை நிறுவனத்துக்கும் தரவுள்ளோம் என்றார்.
திவ்யஸ்ரீ நிறுவனத்தில் ஆக்ஸான் நிறுவன முதலீட்டு மதிப்பு  தற்போது  $175 மில்லியனாக உயர்ந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான திவ்யஸ்ரீ டெவலப்பர்ஸ் அடுத்த நான்கு வருடங்களில் முதலீட்டு பணிகளுக்காக $100 மில்லியன் திரட்ட முடிவு செய்துள்ளது.
Read more...

எவ்ரான் எஜுகேஷனின் 12% பங்கை வாங்கும் வர்கி குழுமம்

எவ்ரான் எஜுகேஷனின் 12% பங்கை வாங்கும் வர்கி குழுமம்
துபாயைச் சேர்ந்த வர்கி குழுமம் சென்னையைச் சேர்ந்த எவ்ரான் எஜுகேஷனின் 12% பங்கை ரூ.138.23 கோடிக்கு வாங்கியுள்ளது.
வர்கி குழுமம் 2.6 மில்லியன் பங்குகளை எவ்ரான் எஜுகேஷன் நிறுவனத்திடம் ஒரு பங்கு ரூ.528க்கு வாங்கியுள்ளது.
ஹெல்த்கேர், உள்கட்டமைப்பு, கல்வித் துறை பங்குகளில் கவனம் செலுத்தும் வர்கி குழுமம் ஏற்கனவே சிறிய அளவில் எவ்ரான் பங்குகளை வாங்கியிருந்தது. தற்போது வாங்கப்பட்டுள்ள 2,618,120 பங்குகளில் வர்கி குழுமத் தலைவர் சுன்னி வர்கி வசம் 2.65% பங்குகளும், வர்கி குழும உறவினர் ஷர்லி வசம் 2.87% பங்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாயைச் சேர்ந்த வர்கி குழுமம் சென்னையைச் சேர்ந்த எவ்ரான் எஜுகேஷனின் 12% பங்கை ரூ.138.23 கோடிக்கு வாங்கியுள்ளது.
Read more...

ரூ.500 கோடி பாண்டுகள் மூலம் திரட்ட முடிவு : ஷெராய் இன்ஃப்ரா

ரூ.500 கோடி பாண்டுகள் மூலம் திரட்ட முடிவு : ஷெராய் இன்ஃப்ரா
உள்கட்டமைப்பு பங்குகளை ஜனவரி 2012ல் வெளியிடுவதன் மூலம் ரூ.500 கோடி திரட்ட ஷெராய் இன்ஃப்ரா முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஷெராய் நிறுவன தலைவர் ஹேமந்த் கூறுகையில்,
கடந்த இரு வருடங்களாக பாண்டுகள் மூலம் வரிசேமிப்பு முறை அமலில் இருந்தாலும்,இதுவரை எங்கள் நிறுவனம் மூலம் எந்தவொரு உள்கட்டமைப்பு பாண்டுகளையும் வெளியிட்டதில்லை.
தற்போது வரும் புத்தாண்டு ஜனவரி முதலில் ரூ.500 கோடி மதிப்பிலான பாதுகாப்பான , திரும்பப் பெறக்கூடிய உள்கட்டமைப்பு பங்குகளை வெளியிடுகிறோம் என்றார்.
உள்கட்டமைப்பு பங்குகளை ஜனவரி 2012ல் வெளியிடுவதன் மூலம் ரூ.500 கோடி திரட்ட ஷெராய் இன்ஃப்ரா முடிவு செய்துள்ளது.
Read more...

பாண்டுகள் மூலம் ரூ.1,400 கோடி :இந்தியன் ஆயில் கார்பரேஷன்

பாண்டுகள் மூலம் ரூ.1,400 கோடி :இந்தியன் ஆயில் கார்பரேஷன்
மாநில அரசின் பொது துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.1,400 கோடியை உள்நாட்டில் பாண்டுகள் மூலம் திரட்டியுள்ளது.
மூன்று ஏ நட்சத்திர குறியீடு கொண்ட இந்த பாண்டுகள் ஜந்தாண்டு காலத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. இடையில் பணம் தேவைப்படுவோர் 18 மாதம் முடிந்த பின்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்.
டிசம்பர் 15 2011 அன்று வெளியிடப்பட்ட இந்த பாண்டு மூலம் ரூ.1,400 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம்.
மாநில அரசின் பொது துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.1,400 கோடியை உள்நாட்டில் பாண்டுகள் மூலம் திரட்டியுள்ளது.
Read more...

ரூ.523 கோடி திரட்டிய கோடாக் ரியால்டி

ரூ.523 கோடி திரட்டிய கோடாக் ரியால்டி
கோடாக் மகேந்திரா வங்கியின் ஒரு பங்கு வெளியீடான கோடாக் ரியால்டி ரூ.523 கோடியை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் திரட்டி ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொடுக்கவுள்ளது.
இது குறித்து கோடாக் ரியால்டி பங்கு இயக்குனர் விகாஷ் கூறுகையில், $700 மில்லியன் மதிப்பிலான ஜந்து பாண்டுகள் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை திரட்டியுள்ளோம். அதில் ரூ.523 கோடிக்கு திரட்டிய கோடாக் ரியால்டி பங்கை வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு தரவுள்ளோம் என்றார்.
கோடாக் மகேந்திரா வங்கியின் ஒரு பங்கு வெளியீடான கோடாக் ரியால்டி ரூ.523 கோடியை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் திரட்டி ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொடுக்கவுள்ளது.
Read more...

நாட்கோ பார்மாவில் 3.5% வாங்கிய திலீப் ஷாங்குவி

நாட்கோ பார்மாவில் 3.5% வாங்கும் திலீப் ஷாங்குவி
சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் ஷாங்குவி நாட்டின் குறிப்பிட தகுந்த நாட்கோ பார்மாவின் 3.5% பங்குகளை வாங்க உள்ளார்.
ஒரு மில்லியன் பங்குகளை ரூ.25 கோடிக்கு திலீப் வாங்க உள்ள நிலையில் இரு நிறுவனங்களும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
நேற்று ஆரஞ்ச் மெர்டிசியஸ் வசமிருந்த 7,25,000 பங்குகளை ஒரு பங்கு ரூ.253 என்ற நிலையில் ரூ.18.34 கோடிக்கு ஷாங்குவி பெயரில் வாங்கப்பட்டுள்ளது. டிசம்பர் ஜந்தாம் தேதி பாஷா பைனான்ஸ் வசமிருந்த 2,75,000 பங்குகளை பங்கு ஒன்று ரூ.233.60க்கு ரூ.6.42 கோடிக்கு ஷாங்குவி வாங்கியுள்ளார்.நாட்கோ பார்மா பங்குகள் இன்றைய பங்கு சந்தையில் 7.20% குறைந்து ரூ.258.55க்கு சந்தையிடப்பட்டது.
சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் ஷாங்குவி நாட்டின் குறிப்பிட தகுந்த நாட்கோ பார்மாவின் 3.5% பங்குகளை வாங்க உள்ளார்.
Read more...

புதிய உச்சத்தில் தங்கம் 10 கிராம் ரூ.29,490

புதிய உச்சத்தில் தங்கம் 10 கிராம் ரூ.29,490
கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து தங்கம் பத்து கிராம் விலை ரூ.29,490க்கு
விற்கப்பட்டது.
வரப் போகும் தை மாத திருமண காலம் மற்றும் அறுவடை காலத்தை கருத்தில்
கொண்டு தங்க நகை மொத்த விற்பனையாளர்கள் அதிகளவில் வாங்குவதே விலை
உயர்வுக்கு காரணமெனக் கருதப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியும் ரூ.1,050
விலை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.56,950க்கு விற்கப்பட்டது.
கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து தங்கம் பத்து கிராம் விலை ரூ.29,490க்கு விற்கப்பட்டது.
Read more...

ரூ.5,200 கோடிக்கு உரிமை பங்குகள் வெளியீடு:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரூ.5,200 கோடிக்கு உரிமை பங்குகள் வெளியீடு:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அடுத்த வருட ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் $1 பில்லியன் (ரூ.5,300 கோடி)
மதிப்பிலான பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பங்கு சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
சிட்டிகுரூப்,பேங்க் ஆப் அமெரிக்கா,யுபிஎஸ் போன்ற நிறுவனங்களிடன் மேலும் இரண்டு சர்வதேச
வங்கிகள் பங்குகள் உரிமத்தில் இடம் பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
$1.5 பில்லியன் மதிப்பிலான பங்குகளை கடந்த அக்டோபரில் இரு பகுதிகளாக திரட்டியது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். $1 பில்லியன் பங்குகளை 10 வருட ஒப்பந்தத்திலும், $500 மில்லியன்
மதிப்பிலான பங்குகளை 30 வருட ஒப்பந்தத்திலும் திரட்டிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போதைய
பங்குகளிக்கு 10 வருட ஒப்பந்தத்தை தீர்மானித்து உள்ளது.
பங்கு சந்தையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.778.25 க்கு சந்தையிடப்பட்டது.
அடுத்த வருட ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் $1 பில்லியன் (ரூ.5,300 கோடி) மதிப்பிலான பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பங்கு சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிட்டிகுரூப்,பேங்க் ஆப் அமெரிக்கா,யுபிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் மேலும் இரண்டு சர்வதேச வங்கிகள் பங்குகள் உரிமத்தில் இடம் பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

$1.5 பில்லியன் மதிப்பிலான பங்குகளை கடந்த அக்டோபரில் இரு பகுதிகளாக திரட்டியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். $1 பில்லியன் பங்குகளை 10 வருட ஒப்பந்தத்திலும், $500 மில்லியன் மதிப்பிலான பங்குகளை 30 வருட ஒப்பந்தத்திலும் திரட்டிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போதைய பங்குகளுக்கு 10 வருட ஒப்பந்தத்தை தீர்மானித்து உள்ளது.

பங்கு சந்தையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.778.25 க்கு சந்தையிடப்பட்டது.
 

பேஸ்புக்கின் புதிய முகம் பங்கு வர்த்தகம்

பேஸ்புக்கின் புதிய முகம் பங்கு வர்த்தகம்
சமூக வலைதளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும்  பேஸ்புக் 2012ம் ஆண்டில் பங்கு
வர்த்தகத்தில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வால்ஸ்டீரிட் பத்திரிக்கை
தெரிவித்துள்ளது.
800 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக்கில் தினமும் குறைந்தது 500 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள்.
$100 பில்லியன் மதிப்புக் கொண்ட பேஸ்புக் தனது மதிப்பில் $10 பில்லியன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் நிதி அதிகாரி
டேவிட் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் $1.6 பில்லியன் நிகர இலாபம் ஈட்டியுள்ள பேஸ்புக் பங்கு வர்த்தகம் பற்றி அதன் இயக்குநர் மார்க்
ஜுகன்பர்க் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சமூக வலைதளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் 2012ம் ஆண்டில் பங்கு வர்த்தகத்தில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வால்ஸ்டீரிட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
Read more...

பாரதி ஏர்டெல் பங்குகள் மதிப்பு 2.3% சரிவு

 

பாரதி ஏர்டெல் பங்குகள் மதிப்பு 2.3% சரிவு
நாட்டின் மிகப் பெரிய செல்போன் சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல் இன்று தனது பங்குகள் மதிப்பில் 2% சரிவை சந்தித்தது.
பாரதி ஏர்டெல்லில் கடந்த சனிக்கிழமை சிபிஜ ரெய்டு நடத்தியதே பங்கு மதிப்பு சரியக் காரணம் எனக் கூறப்படுகிறது. அலைக்கற்றை ஊழல் வழக்கிற்காக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களில் சிபிஜ ரெய்டு நடத்தியது. ஏர்டெல் தொடர்பான அலைக்கற்றை ஒதுக்கீடுகள் அனைத்தும் அரசின் விதிமுறைக்கு உட்பட்டே  நடைபெற்றதாய் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 2.3% சரிவால் பாரதி ஏர்டெல் ஒரு பங்கின் மதிப்பு ரூ.388.50 ஆக இருந்தது. மொத்த சந்தையின் மதிப்பும் இன்று சற்று சரிந்தே காணப்பட்டது.  சென்செக்ஸ் மதிப்பு 2.6% சரிந்து 15,946.10 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
நாட்டின் மிகப் பெரிய செல்போன் சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல் இன்று தனது பங்குகள் மதிப்பில் 2% சரிவை சந்தித்தது.
Read more...

மத்திய அரசுக்கு ரூ.24.83 கோடி டிவிடெண்ட் : எம்எம்டிசி

மத்திய அரசுக்கு ரூ.24.83 கோடி டிவிடெண்ட் : எம்எம்டிசி
மாநில அளவில் இயங்கும் தாதுக்கள் வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி கடந்த 2010-11ம் நிதியாண்டிற்கு ரூ.24.83 கோடியை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு செலுத்த உள்ளது.
இந்நிறுவனத்தின் 48வது ஆண்டுக் கூட்டத்தில் 2010-11ம் நிதியாண்டிற்கு 25% டிவிடெண்ட் தருவதாக முடிவு செய்யப்பட்டது.
ரூ.24.83 கோடிக்கான செக் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் கொடுக்கப்படும்.
எம்எம்டிசி வரிக்கு பிந்திய வருமானமாக ரூ.122 கோடி ஈட்டியுள்ளது. மேலும் இத்துறையின் மொத்த வர்த்தகம் ரூ. 68,855 கோடியாகும். இதில் ரூ.3,694 கோடி ஏற்றுமதியிலும், ரூ.63,301 கோடி இறக்குமதியிலும், ரூ.1,860 கோடி உள்நாட்டு வர்த்தகதிற்கும் செலவிடப்பட்டுள்ளது.
மாநில அளவில் இயங்கும் தாதுக்கள் வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி கடந்த 2010-11ம் நிதியாண்டிற்கு ரூ.24.83 கோடியை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு செலுத்த உள்ளது.
Read more...

கடன் பத்திரம் மூலம் ரூ. 16,800 கோடி திரட்ட முடிவு : பி.எப்.சி

 

கடன் பத்திரம் மூலம் ரூ. 16,800 கோடி திரட்ட முடிவு : பி.எப்.சி
பொதுத் துறை நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.16,800 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
மின் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைக்காக பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி) நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக, கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 16 ஆயிரத்து 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேற்கண்ட மொத்த நிதியில், 200 கோடி ரூபாயை திரட்டும் வகையில், இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் 29ம் தேதி, கடன் பத்திரங்களை வெளியிட்டது. பத்தாண்டுகளில் முதிர்வடையக்கூடிய கடன் பத்திரங்களுக்கு 8.50 சதவீத வட்டியும், 15 ஆண்டு காலத்திற்கான கடன் பத்திரங்களுக்கு 8.75 சதவீத வட்டியும் வழங்கப்படும்.
வரிச் சேமிப்பு மற்றும் வரிவிலக்குடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 11 ஆயிரத்து 900 கோடி ரூபாயும், நடுத்தர கால அடிப்படையிலான, சர்வதேச கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 4,900 கோடி ரூபாயும் திரட்டும் வகையில் ஒப்புதல் பெற்றுள்ளது என, இந்நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஆர்.நாகராஜன் தெரிவித்தார்
பொதுத் துறை நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.16,800 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 10

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED