Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பங்குச் செய்திகள்

தள்ளாடும் பங்குச்சந்தை

காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய பகல்நேர வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. பிற்பகல் வர்த்தகத்தின் போதும் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கமே காணப்பட்டது. காலையில் 72 புள்ளிகள் அல்லது 0.42 சதவீதம் உயர்ந்து 18,316.32 புள்ளிகளுடன் துவங்கிய சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேர முடிவில் 20.32 புள்ளிகள் சரிந்து 18217.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 0.48 சதவீதம் அதிகரித்து 5,510.40 புள்ளிகளில் துவங்கி 10.40 புள்ளிகள் குறைந்து 5475.75 புள்ளிகளில் முடிந்தது. பங்குச் சந்தை சரிவிற்கு இன்று வெளியிடப்பட்ட கடந்த வாரத்திற்கான உணவு பணவீக்கமே காரணம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் முடிவு

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.44 புள்ளிகள் அதிகரித்து 18238.31 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.30 புள்ளிகள் அதிகரித்து 5486.15 புள்ளிகளோடு காணப்பட்டது.

தொழிலாளர் சேமநலநிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுமா?

தொழிலாளர் சேமநல நிதியை (இ.பி.எப்.,)பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து வரும் 10ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் சம்பளத்தில் சேமநல நிதிக்காக பிடித்தம் செய்யப்படும் பணம் பல லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த நிதியை கொண்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

 

தற்போது கையிருப்பில் உள்ள பி.எப்., நிதி ஐந்து லட்சம் கோடியில் 15 சதவீத நிதியை, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய வருவாயைக் கொண்டு தற்போது பி.எப்.,க்கு அளிக்கப்படும் 8.5 சதவீத வட்டியை கூடுதலாக உயர்த்தித் தர முடியும் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால், இதற்கு தொழிற்சங்கத்தினரும், பி.எப்., அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கடந்த 10ம் தேதி நடந்த கூட்டத்தில் பி.எப்., வட்டி விகிதத்தை 9.5 முதல் 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு ஏதும் எட்டப்படவில்லை. சேமநல நிதி விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கும் படி தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு, நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

இது குறித்து தொழிலாளர் நலத்துறை செயலர் பி.சி.சதுர்வேதி கூறியதாவது: இது தொழிலாளர்களின் பணம். எனவே, இதை எச்சரிக்கையாக கையாள வேண்டியுள்ளது. நாங்கள் அதிகம் யோசிப்பதால் எங்களை பழமைவாதிகள் என மக்கள் கூறுகின்றனர். பி.எப்., தொகையின் முதலீடுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது, என்பதில் கவனமாக உள்ளோம். எந்த முடிவாக இருந்தாலும் அதை பி.எப்., மத்திய அறக்கட்டளை தான் உறுதி செய்யும். வரும் 10ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இவ்வாறு சதுர்வேதி கூறினார்.

Last Updated ( Monday, 30 August 2010 10:59 )

வர்த்தகம் சரிவில் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கி­ சரிவுடனேயே முடிந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53.12 புள்ளிகள் குறைந்து 18401.82 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.55 புள்ளிகள் குறைந்து 5530.65 புள்ளிகளோடும் காணப்பட்டது. 

பங்குச்சந்தையில் சறுக்கல் - ஏன்?

இந்த வார பங்குச்ச‌ந்தை சிறிது சறுக்கி வருகிறது. திங்களன்று மும்பை பங்குச் சந்தை, 143 புள்ளிகள் அதிகமாகி முடிந்தாலும் செவ்வாயும், புதனும் சந்தை கீழேயே இருந்தது. செவ்வாயன்று உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததாலும், மேலும் சந்தையில் விற்பவர்கள் அதிகம் இருந்ததாலும் இந்திய சந்தைகள் கீழேயே இருந்தன. முடிவாக மும்பை பங்குச் சந்தை, 67 புள்ளிகள் குறைந்து முடிந்தது.நேற்றும் உலகளவில் சந்தைகள் கீழேயேஇருந்ததாலும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்,டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல் கம்பெனிகளின் பங்குகள் கீழே சென்றதாலும், நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 149 புள்ளிகள்குறைந்து, 18,070 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 40 புள்ளிகள் கூடி, 5,420 புள்ளிகளுடனும் முடிந்தது.காலாண்டு முடிவுகள் டாடா மோட்டார்ஸ் அபரிமிதமான காலாண்டு முடிவுகளை தந்துள்ளது. சந்தையில்க டந்த இரண்டு நாளாக அந்தப் பங்கிற்கு ஒரே ஏற்றம் தான். ஜாகுவர், லேண்ட் ரோவர் விற்பனைகள் கூடியதால் லாபம் கூடியது. இது சந்தையை ஓரளவுக்கு காப்பாற்றியது என்றே கூறலாம்.பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் கம்பெனிகள் சந்தைக்கு ஏற்றதான‌ காலாண்டு முடிவுகளை தரவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை பெரிதளவில் வாங்குகின்றன. இம்மாதம் முதல் ஏழு தினங்களில் மட்டும், 3,900 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளன. இருந்தும் சந்தை ஏன் குறைகிறது? உள்நாட்டு நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள் லாபம் பார்க்கும் நோக்கில் விற்கின்றன. அது சந்தையை சிறிது கீழே இறக்குகிறது.புதிய வங்கிகள் பட்ஜெட்டில் குறிப்பிட்ட படி புதிய வங்கிகள் திறப்பதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. இதனால் பலருக்கு வங்கிகள் துவங்க வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆதலால் ரிலையன்ஸ்கேப்பிடல், எஸ்.ஆர்.ஈ.ஐ., - இன்பிரா பைனான்ஸ், ஐ.எப்.சி.ஐ., - மகேந்திராபைனான்ஸ், ஸ்ரீ ராம் பைனான்ஸ் ஆகிய கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றன.மும்பையில் எண்ணெய் ஸ்லிக் மும்பையில் இரண்டு கப்பல்கள் மோதி மூழ்கியதால் அதிலிருந்து, 1,000க்கு மேற்பட்ட கன்டெய்னர்களும், எண்ணெயும் கடலை அசுத்தப்படுத்தியுள்ளதால், மும்பை துறைமுகம் ஒருவாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி,இறக்குமதி வணிகத்தை பெரிதளவில் பாதிக்கும்.புதிய வெளியீடுகள் இன்ஜினியர்ஸ் இந்தியா, அலாட்மென்டை வெளியிட்டுள்ளது. அலாட்மென்ட் கிடைத்தவர்களுக்கு சிறிது லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீண்டகாலம் வைத்திருக்கவும் ஏற்ற பங்குகள் தான்.கோல் இந்தியா, தன் புதிய வெளியீட்டின் மூலம், 63 கோடி பங்குகளை விற்கவுள்ளது. இது, இந்தியாவில் வெளியிடப்படும் மிகப்பெரிய புதிய வெளியீடாக இருக்கும்.சந்தையில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் குறைந்தபட்சம், 25 சதவீதம் சந்தை மூலம்விற்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு விதிகொண்டு வரப்படும் என்று சிறிது காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.அது மிகவும் கடினமாக இருக்கும், விதிகள்தளர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்த தால், அரசு புதிய விதிகள் அறிவித்துள்ளது. இதன்படி அரசு கம்பெனிகள், 10 சதவீதத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்றும், மற்ற கம்பெனிகள், 25 சதவீதத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதுவும் பல கம்பெனிகள் சந்தைக்கு வரவழிக்கும். சந்தையில் புதிய வெளியீடுகளின் கொண்டாட்ட மாகத்தான் இருக்கும்.வரும் நாட்கள் எப்படி இருக்கும்? 18,000 தாண்டியவுடன் ஒரு ப்ரேக் போட்டாற் போல் மேலே செல்ல முடியாமல் தவித்த சந்தை மேலேயும் சென்றது. ஆனால் மறுபடியும் சரசரவென கீழே இறங்கி, 18,000க்கு கிட்டே வந்துவிட்டது.சந்தையில் நீண்டகாலம் இருப்பவர்களுக்கும், புதிதாக வர விரும்புபவர்களுக்கும் இது ஒரு வாய்ப்பு தான் வாங்குவதற்கு.

வர்த்தகம் சரிவில் முடிவு

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 28.20 புள்ளிகள் அதிகரித்து 18248.19 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 7.20 புள்ளிகள் அதிகரித்து 5467.90 புள்ளிகளோடு காணப்பட்டது.வர்த்தக நேர ­­முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149.80 புள்ளிகள் குறைந்து 18070.19 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40.10 புள்ளிகள் குறைந்து 5420.60 புள்ளிகளோடும் காணப்பட்டது.

ஷிப்பிங் கார்ப்பரேஷன்ஸின் இரண்டாவது பங்குகள் வெளியீடு

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டில், இந்நிறு வனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்கு களுடன், புதிய பங்குகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு கப்பல்கள் சேவையில் ஈடுபட்டு வரும் எஸ்.சி.ஐ. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 80.12 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் எல்.ஐ.சி. நிறுவனத்திடமும், மீதமுள்ள 3.15 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசமும் உள்ளன. மத்திய அரசு, அதன் நிதி பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு நிதி ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.40,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், எஸ்.சி.ஐ. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எஸ்.சி.ஐ.யின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வேண்டி, மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த நிலையில், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் ரூ.191 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.120 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.883 கோடியிலிருந்து ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது. 

வ‌ர்த்த‌க‌த்தில் ச‌ரிவு

இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. காலை 9.04 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.40 புள்ளிகள் குறைந்து 17942.97 ஆக வர்த்தகமாகியிருந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.00 புள்ளிகள் குறைந்து 5392.55 ஆக வர்த்தகமாகியிருந்தது.

ப‌ங்குச்ச‌ந்தை சரிவில் வீழ்ச்சி

பங்கு சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 120.24 புள்ளிகள் சரிந்து 17957.37 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 33.05 புள்ளிகள் சரிந்து 5397.55 புள்ளிகளாக இருந்தது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லாசன் அண்ட் டியூப்ரோ, என்டிபிசி, ஹச்யூஎல், ஐசிஐசிஐ ஆகியவற்றின் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் இன்றை பங்கு சந்தை சரிவில் முடிந்தது. 

பங்கு வர்த்தகத்தில் ஏற்றம்

பங்குவர்த்தகத்தின் இன்றைய நாளில் முதலீட்டாளர்கள் ‌பெரும்மகிழ்ச்சியில் திளைக்கி்ன்றனர்.

பங்குச்சந்தை இன்று ஏற்றத்தில் துவங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளது.

வாரத்தின் இரண்டாம் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ் ) 25 புள்ளிகள் உயர்ந்து 18,045 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 4 புள்ளிகள் உயர்ந்து 5,422 புள்ளிகளாகவும் இருந்தது.

வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 57.56 புள்ளிகள் உயர்ந்து 18,077.61 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 12 புள்ளிகள் உயர்ந்து 5,430.60 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.

 

பங்கு வர்த்தக நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கி ஏற்றத்தில் முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் ...

ப‌ங்குச்ச‌ந்தை நில‌வ‌ர‌ம்

மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது சரிவுடனேயே முடிந்தது. காலை 9.17 மணியளவில் மும்...

ப‌ங்கு வ‌ர்த்த‌க‌ நில‌வ‌ரம்

இந்திய பங்குச்சந்தை இன்று நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய ...

பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று 18000 புள்ளிகளுடன் தொடங்கியது சென்செக்ஸ். ...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 5
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED