இந்த வார பங்குச்சந்தை சிறிது சறுக்கி வருகிறது. திங்களன்று மும்பை பங்குச் சந்தை, 143 புள்ளிகள் அதிகமாகி முடிந்தாலும் செவ்வாயும், புதனும் சந்தை கீழேயே இருந்தது. செவ்வாயன்று உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததாலும், மேலும் சந்தையில் விற்பவர்கள் அதிகம் இருந்ததாலும் இந்திய சந்தைகள் கீழேயே இருந்தன. முடிவாக மும்பை பங்குச் சந்தை, 67 புள்ளிகள் குறைந்து முடிந்தது.நேற்றும் உலகளவில் சந்தைகள் கீழேயேஇருந்ததாலும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்,டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல் கம்பெனிகளின் பங்குகள் கீழே சென்றதாலும், நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 149 புள்ளிகள்குறைந்து, 18,070 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 40 புள்ளிகள் கூடி, 5,420 புள்ளிகளுடனும் முடிந்தது.காலாண்டு முடிவுகள் டாடா மோட்டார்ஸ் அபரிமிதமான காலாண்டு முடிவுகளை தந்துள்ளது. சந்தையில்க டந்த இரண்டு நாளாக அந்தப் பங்கிற்கு ஒரே ஏற்றம் தான். ஜாகுவர், லேண்ட் ரோவர் விற்பனைகள் கூடியதால் லாபம் கூடியது. இது சந்தையை ஓரளவுக்கு காப்பாற்றியது என்றே கூறலாம்.பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் கம்பெனிகள் சந்தைக்கு ஏற்றதான காலாண்டு முடிவுகளை தரவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை பெரிதளவில் வாங்குகின்றன. இம்மாதம் முதல் ஏழு தினங்களில் மட்டும், 3,900 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளன. இருந்தும் சந்தை ஏன் குறைகிறது? உள்நாட்டு நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள் லாபம் பார்க்கும் நோக்கில் விற்கின்றன. அது சந்தையை சிறிது கீழே இறக்குகிறது.புதிய வங்கிகள் பட்ஜெட்டில் குறிப்பிட்ட படி புதிய வங்கிகள் திறப்பதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. இதனால் பலருக்கு வங்கிகள் துவங்க வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆதலால் ரிலையன்ஸ்கேப்பிடல், எஸ்.ஆர்.ஈ.ஐ., - இன்பிரா பைனான்ஸ், ஐ.எப்.சி.ஐ., - மகேந்திராபைனான்ஸ், ஸ்ரீ ராம் பைனான்ஸ் ஆகிய கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றன.மும்பையில் எண்ணெய் ஸ்லிக் மும்பையில் இரண்டு கப்பல்கள் மோதி மூழ்கியதால் அதிலிருந்து, 1,000க்கு மேற்பட்ட கன்டெய்னர்களும், எண்ணெயும் கடலை அசுத்தப்படுத்தியுள்ளதால், மும்பை துறைமுகம் ஒருவாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி,இறக்குமதி வணிகத்தை பெரிதளவில் பாதிக்கும்.புதிய வெளியீடுகள் இன்ஜினியர்ஸ் இந்தியா, அலாட்மென்டை வெளியிட்டுள்ளது. அலாட்மென்ட் கிடைத்தவர்களுக்கு சிறிது லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீண்டகாலம் வைத்திருக்கவும் ஏற்ற பங்குகள் தான்.கோல் இந்தியா, தன் புதிய வெளியீட்டின் மூலம், 63 கோடி பங்குகளை விற்கவுள்ளது. இது, இந்தியாவில் வெளியிடப்படும் மிகப்பெரிய புதிய வெளியீடாக இருக்கும்.சந்தையில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் குறைந்தபட்சம், 25 சதவீதம் சந்தை மூலம்விற்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு விதிகொண்டு வரப்படும் என்று சிறிது காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.அது மிகவும் கடினமாக இருக்கும், விதிகள்தளர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்த தால், அரசு புதிய விதிகள் அறிவித்துள்ளது. இதன்படி அரசு கம்பெனிகள், 10 சதவீதத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்றும், மற்ற கம்பெனிகள், 25 சதவீதத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதுவும் பல கம்பெனிகள் சந்தைக்கு வரவழிக்கும். சந்தையில் புதிய வெளியீடுகளின் கொண்டாட்ட மாகத்தான் இருக்கும்.வரும் நாட்கள் எப்படி இருக்கும்? 18,000 தாண்டியவுடன் ஒரு ப்ரேக் போட்டாற் போல் மேலே செல்ல முடியாமல் தவித்த சந்தை மேலேயும் சென்றது. ஆனால் மறுபடியும் சரசரவென கீழே இறங்கி, 18,000க்கு கிட்டே வந்துவிட்டது.சந்தையில் நீண்டகாலம் இருப்பவர்களுக்கும், புதிதாக வர விரும்புபவர்களுக்கும் இது ஒரு வாய்ப்பு தான் வாங்குவதற்கு.
i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...