இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிந்து 17471 ஆக இருந்து. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் சரிந்து 5241 புள்ளிகளாக இருந்தது. உலக பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவான போக்கே காணப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2.2 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் ஒரு சதவீதமும் வீழ்ச்சி அடைந்தன. ஓஎன்ஜிசி பங்குகளும், ரிலையன்ஸ் நிறுவன பங்குகளும் தலா 1.8 சதவீதமும் சரிவடைந்தன. இதே போன்று ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 1.5 சதவீதமும், ஹச்டிஎஃப்சி பங்குகள் ஒரு சதவீதமும் வீழ்ச்சி அடைந்தன. தொலைத் தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏட்டெல் பங்குகள் 1.8 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 1.5 சதவீதமும் சரிவடைந்துள்ளன
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





