கடந்த சில நாட்களாக சரிவையே சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், இன்றைய வர்த்தக நேர துவக்கம் முதல் உயர்வுடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்ந்து 17664 புள்ளிகளுடனும், நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து 5299 புள்ளிகளுடனும் காணப்படுகின்றன. கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதால், இந்திய பங்குச் சந்தைகளிலும் உயர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையான டவ் ஜோன்ஸ் 274 புள்ளிகளும், நாஸ்டாக் பங்குச் சந்தை 65 புள்ளிகளும் உயர்வுடன் காணப்படுகின்றன. ஸ்டெர்லைட் நிறுவன பங்குகள் 108 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.3 சதவீதமும் உயர்வுடன் காணப்படுகின்றன.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





