காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய பகல்நேர வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. பிற்பகல் வர்த்தகத்தின் போதும் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கமே காணப்பட்டது. காலையில் 72 புள்ளிகள் அல்லது 0.42 சதவீதம் உயர்ந்து 18,316.32 புள்ளிகளுடன் துவங்கிய சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேர முடிவில் 20.32 புள்ளிகள் சரிந்து 18217.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 0.48 சதவீதம் அதிகரித்து 5,510.40 புள்ளிகளில் துவங்கி 10.40 புள்ளிகள் குறைந்து 5475.75 புள்ளிகளில் முடிந்தது. பங்குச் சந்தை சரிவிற்கு இன்று வெளியிடப்பட்ட கடந்த வாரத்திற்கான உணவு பணவீக்கமே காரணம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





