இந்திய பங்கு வர்த்தகத்தை கவனிக்கும் அமைப்பான செபிக்கு புதிய தலைவராக UTI யின் CMD ஆக இருந்த திரு.UK சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் சி பி பாவே பிப்ரவரி 17 -ந் தேதி பணி ஒய்வு பெறுகிறார். AMFI’s தலைவரான சின்ஹா செபித் தலைவர் தேர்வுக்குழு பரிந்துரையில் முதலிலேயே பரிசீலிக்கப்பட்டார்.
கார்பரேட் விஷயங்களுக்கான செயலாளர் ஆர்.பாண்டியபாத்யாய், Department of Disinvestment இணைச் செயலாளர் எஸ்.பரதன், மத்திய பிரதேச முதல் செயலாளர் ஜி.பி.சின்ஹால், SBI -யின் இரண்டு நிர்வாக இயக்குனர்கள் எஸ் கே பாட்டாச்சார்யா, ஆர்.ஷீதரன் ஆகியோர் தேர்வுக் குழுவின் பரிசீலனையில் இருந்தனர். பீகாரைச் சேர்ந்த IAS அதிகாரியான சின்ஹா மியூச்வல் பண்ட் பிரிவில் பணிபுரிவதற்கு முன்பு காப்பிடல் மார்கெட் செயலாளராக பணிபுரிந்தார்.
செபியின் தலைவராக சின்ஹா ஜலன் கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





