ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸ்,டிசிஎஸ்,ஜடிசி போன்ற நிறுவனக்களின் நிறுவன புரோமோட்டார்கள், பொது முதலீட்டாளர்கள் உட்பட பலரும் இன்றைய பங்கு வர்த்தகத்தில் ரூ.1,22,000 கோடியை இழந்தனர்.உயர்ந்து வரும் பணவீக்கம்,கடன் மீதான வட்டி போன்றவை நிறுவன உற்பத்திப் பொருள்களின் விலையை உயர்த்தும் என்பதால் இன்றைய சென்செக்ஸ் 441 புள்ளிகள் சரிவில் இருந்தது.இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.1,22,129 கோடி இழப்பு ஏற்பட்டது.இழ்ழிழப்புத் தொகை கடந்த தீபாவளியின் போது இருந்த சந்தை மதிப்புடன் ஒப்பீட்டு கணக்கிடப்பட்டுள்ளது.
தீபாவளியின் போது பங்குச் சந்தை 21,004 புள்ளிகளுடன், ரூ.77,00,000 கோடியாக இருந்தது.
இன்றைய இழப்பில் புரோமோட்டார்களுக்கு ரூ.70,000 கோடி இழப்பும், பொது முதலீட்டாளர்களுக்கு ரூ.50,000 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது. பொது முதலீட்டாளர்களுக்கு புளூ சிப் நிறுவனங்களில் மட்டும் ரூ.35,000 கோடி இழப்பும்,புரோமோட்டாளர்களுக்கு ரூ.25,000 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்களில் ரிலையன்ஸ் ரூ.7,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற நிறுவனங்களின் இழப்புத் தொகை வருமாறு :
TCS (Rs 7,200 கோடி), ITC (Rs 5,200 கோடி), NTPC (Rs 4,500 கோடி), Infosys (Rs 4,000 கோடி), ICICI Bank (Rs 3,900 கோடி), L&T (Rs 3,500 கோடி) and Bharti Airtel (Rs 3,000 கோடி)
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





