பாண்டுகள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட ஏர்போர்ட் இந்தியா முடிவு
இந்தியா ஏர்போர்ட்கள் அமைப்பு நாடு முழுவதும் 125 ஏர்போர்ட்களை நிர்வகித்து வரும் நிலையில் ரூ.5,000 கோடி நிதி திரட்ட உள்கட்டமைப்பு பாண்டுகள் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்தியா ஏர்போர்ட்கள் அமைப்பின் தலைவர் வி.பி.அகர்வால் கூறுகையில்,
பன்னிரண்டாவது வளர்ச்சி திட்டப்படி,அடுத்த வளர்ச்சி பகுதிகளில் 15 ஏர்போர்ட்களை மேம்படுத்த மத்திய அரசை அனுக உள்ளோம்.
2011-12ம் நிதியறிக்கையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் ரூ.30,000 கோடிக்கு உள்கட்டமைப்பு வரிவிலக்கு பாண்டுகளுக்கு அனுமதியளித்தார்.கடந்த 2009ம் ஆண்டு வரிவிலக்கு அளிக்கக்கூடிய உள்கட்டமைப்பு பாண்டுகளுக்கு மத்திய அரசு அனுமதியளிக்காத நிலையில் இந்த முறை நிச்சயம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாய் அவர் கூறினார்.
சென்னை ஏர்போர்ட் மேம்பாட்டு பணிகள் இந்த வருட இறுதிக்குள்ளும்,கொல்கத்தா ஏர்போர்ட் பணிகள் அடுத்த வருடம் மார்சிலும் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏர்போர்ட்கள் அமைப்பு நாடு முழுவதும் 125 ஏர்போர்ட்களை நிர்வகித்து வரும் நிலையில் ரூ.5,000 கோடி நிதி திரட்ட உள்கட்டமைப்பு பாண்டுகள் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.





