முதலீட்டுக்கு $100 மில்லியன் திரட்ட திவ்யஸ்ரீ டெவலப்பர்ஸ் முடிவு
பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான திவ்யஸ்ரீ டெவலப்பர்ஸ் அடுத்த நான்கு வருடங்களில் முதலீட்டு பணிகளுக்காக $100 மில்லியன் திரட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து திவ்யஸ்ரீ நிறுவன தலைமை செயல் இயக்குனர் பாஸ்கர் ராஜு கூறுகையில்,
வரும் 2012 முதலில் ஈக்விட்டி பங்குகள் மூலம் குறைந்தபடசம் $30 மில்லியன் திரட்ட முடிவு செய்துள்ளோம். ரூ.1,000 கோடி மதிப்பிலான திவ்யஸ்ரீ நிறுவனத்தில் சர்வதேச ஈக்விட்டி நிறுவனமான டிபிஜி ஆக்ஸான் 2007ம் ஆண்டு செய்துள்ள $100 மில்லியனைத் திரும்ப பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த நான்கு வருடங்களாக எங்களுக்கும் ஆக்ஸான் நிறுவனத்துக்கும் உறவு நல்ல முறையில் இருக்கையில், முதலீட்டை திரும்பப் பெறுவது குறித்து ஆக்ஸான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தனியார் நிறுவனமான ஆக்ஸான் முதலீட்டை திரும்ப பெறும் நிலையில் பாதி பங்குகளை திவ்யஸ்ரீ நிறுவனமும், மீதியிருக்கும் பங்குகளை தனியார் பங்கு சந்தை நிறுவனத்துக்கும் தரவுள்ளோம் என்றார்.
திவ்யஸ்ரீ நிறுவனத்தில் ஆக்ஸான் நிறுவன முதலீட்டு மதிப்பு தற்போது $175 மில்லியனாக உயர்ந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான திவ்யஸ்ரீ டெவலப்பர்ஸ் அடுத்த நான்கு வருடங்களில் முதலீட்டு பணிகளுக்காக $100 மில்லியன் திரட்ட முடிவு செய்துள்ளது.





