பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட பலத்த சரிவில் இருந்து இன்று மீண்டுள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் 507 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் 146 புள்ளிகளும் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை தள்ளாடி வருகிறது. நேற்று மும்பை பங்குச்சந்தையில் 491 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதற்கு நேர்மாறாக இன்று 507 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது. சர்வதேச பங்குச்சந்தையிலும் இன்று நல்ல முன்னேற்றமே காணப்பட்டது. பங்கு வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 180 புள்ளிகளும் நிப்டி 70 புள்ளிகளும் அதிகரித்தன. பின்னர் தொடர்ந்து முன்னேற்ற நிலையே காணப்பட்டது.
ஹிண்டல்கோ 9%, டி.எல்.எப் 8%, ரிலையன்ஸ் 5% ஐசிஐசிஐ 4%, என நிறுவனபங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தன. டி.சி.எஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் நிறுவன பங்குகளும் முன்னேற்றம் கண்டிருந்தன.
இன்றைய முடிவில்
மும்பை சந்தை - 15912.13(507.19 அதிகரிப்பு)
தேசிய சந்தை - 4710.80(146.90அதிகரிப்பு)
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





