
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையும் இன்று ஏற்றத்துடன் துவங்கி உள்ளது. துவக்கத்திலேயே சென்செக்ஸ் 226 புள்ளிகள் அதிகரித்து 16995 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 5089 புள்ளிகளாக உள்ளது.
க்ரீஸ் நாட்டிற்கு 600 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அறிவித்ததை அடுத்து ஆசிய சந்தைகள் ஒரு வாரத்திற்கு பிறகு ஏற்றம் பெற துவங்கி உள்ளன. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டிஎல்எஃப், ஆர்ஐஎல் ஆகியவற்றின் பங்குகள் அதிக லாபம் பெற்றுள்ளன.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





